Breaking News

இன்று யாழ் வருகிறார் ஜனாதிபதி!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­ சி­றிசேன, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா குமாரதுங்க, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் இன்று வடக்­கிற்கு விஜயம் செய்து, உயர்பாதுகாப்பு வலயங்களிலிருந்து விடுவிக்கப்படும் நிலங்களை மக்களிடம் கையளிக்கின்றனர்.

25வரு­டங்­களின் பின்னர் பொது­மக்கள் பார்­வை­யிட அனு­ம­திக்­கப்­பட்ட வளலாய் பகு­தியை உத்­தி­யோக பூர்­வ­மாக அவர்­க­ளி­டத்தில் கைய­ளிக்கும் நிகழ்வில் பங்­கேற்­ப­தற்­காக இவர்கள் செல்லவுள்­ளனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் புதிய அர­சாங்கம் அமை­யப்­பெற்­றதன் பின்னர் பொது­மக்­க­ளுக்குச் சொந்­த­மான நிலங்கள் மீண்டும் மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­படும் என கூறப்­பட்­டது. அத்­துடன் வடக்கில் இரா­ணு­வத்தின் உயர்­பா­து­காப்­பபு வல­யங்கள் அமைந்­துள்ள நிலப்­ப­ரப்பில் 1100ஏக்கர் பரப்­ப­ள­வு­டைய நிலப்­ப­ரப்பு பொது­மக்­க­ளி­டத்தில் விரைவில் கைய­ளிக்­கப்­படும் என மிள்­கு­டி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தனது யாழ்.விஜ­யத்­தின்­போது உறு­தி­ய­ளித்­தி­ருந்தார்.

அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டில் ஏற்­பட்ட அசா­த­தா­ரண சூழ்­நி­லை­களால் இடம்­பெ­யர்ந்த இப்­பி­ர­தேச மக்கள் தமது சொந்த நிலங்­களை இழந்­தி­ருந்­தனர். அவற்றை பார்­வை­யி­டு­வ­தற்­காக அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்­தனர். குறிப்­பாக கோப்பாய் பிர­தேச செய­லாளர் பிரிவின் கீழ் உள்ள வளலாய் கிராம சேவகர் பிரி­வி­லுள்ள 232ஏக்கர் நிலப்­ப­ரப்பு பொது­மக்­களின் பார்­வைக்­காக விடு­விக்­கப்­பட்­ட­துடன் வலி.வடக்கில் அச்­சு­வேலி வயா­விளான் பகு­தியும் மக்­களின் பார்­வைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டது.

இந்­நி­லையில் எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை குறித்த நிலப்­ப­ரப்­பினை பூர்­வீ­க­மாகக் கொண்ட மக்­க­ளி­டத்தில் அவர்­களின் நிலங்­களை வழங்­கு­வ­தற்­கான ஏற்­பா­டுகள் அர­சாங்­கத்தால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.இந்­நி­கழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில்­விக்­கி­ர­சிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதியின் நிகழ்வுகளில் பங்கேற்குமாறு நேற்று மாலைவரை தனக்கு அழைப்பு வரவில்லை என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் ஊடகச் செய்திகளை மாத்திரமே தான் அறிந்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.