Breaking News

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய கடற்படை வீரர்கள் மூவர் கைது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்கு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்றும் அதில் இருவர் ஓய்வு பெற்றுள்ளதாகவும் ஒருவர் இன்னும் சேவையில் இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

கடந்த வாரம் கைது செய்யப்பட்ட கடற்படையினரிடம் 2006ம் ஆண்டில் இடம்பெற்ற நடராஜா ரவிராஜ் கொலை குறித்து விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.