19வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை சோபித்த தேரர் சத்தியாக்கிரகம்
19வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் வரை, மாதுலுவாவே சோபித்த தேரர், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்.
இவர் இன்று காலை முதல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்த சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளவுள்ளார். இதேவேளை 19வது திருத்தம் குறித்த விவாதம் இன்று பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.