தமிழக மீனவர்கள் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்திக்கவுள்ளனர்
இலங்கை கடற்பரப்பில் தடையின்றி சுதந்திரமாக மீன்பிடியில் ஈடுபட அனுமதியை பெற்றுத்தருமாக, இந்திய அரசாங்கத்திடம் தமிழக மீனவர்கள் கோவுள்ளனர்.
இது தொடர்பில் தமிழக மீனவர்களின் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்த சந்திப்பு நாளையதினம் நடைபெறவுள்ளது. இலங்கை கடற்பரப்பில் ஒருநாள் தமிழக மீனவர்களும், மறுநாள் இலங்கை மீனவர்களும் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.
அண்மையில் சென்னையில் நடைபெற்றிருந்த இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் போதும், இந்த கோரிக்கையை தமிழக மீனவர்கள் முன்வைத்திருந்தனர். எனினும் இதற்கு இலங்கை மீனவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.