Breaking News

கஹவத்தை பெண்ணை அவரது மகனே கொலை செய்ததாக பொலிஸார் தெரிவிப்பு

கஹவத்தை கொட்டகெத்தன பகுதியில் 3 பிள்ளைகளின் தாயொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் சந்தேகநபரான அந்த பெண்ணின் 2 ஆவது மகன், கொலை தொடர்பில் குற்ற ஒப்புதல் அளித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபரை பெல்மதுளை நீதவான் நீதழிமன்றத்தில் இன்று (10) ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.

கொட்டகெத்தன பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அந்த பெண்ணின் 18 வயதுடைய மகன் நேற்று (09) மாலை கைது செய்யப்பட்டார்.