ஜுன் 27 இல் சட்டமன்ற இடைத் தேர்தல்! சென்னையில் களமிறங்கும் ஜெ.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகு தியில் அ.தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட உள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற அ.தி.மு.க. பொதுச்செய லாளர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் சட்டசபை உறுப்பினர் மற்றும் தமிழக முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் சொத்துக்குவிப்பு மேன்முறையீட்டு வழக்கில் விடுதலை பெற்ற ஜெயலலிதா, மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். தற்போது சட்டசபை உறுப்பினராக இல்லாத ஜெயலலிதா அடுத்த 6 மாத காலத்திற்குள் சட்டசபை உறுப்பினராக வேண்டும்.
இந்நிலையில், அண்மையில் சென்னை ஆர்.கே. நகர் அ.தி.மு.க.சட்டசபை உறுப்பினரான வெற்றிவேல் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஆர்.கே.நகர் தொகுதியில் எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கான வேட்புமனுத் தாக்கல் எதிர்வரும் ஜூன் 3ஆம் திகதி தொடங்குகிறது. வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் கடைசி திகதி ஜூன் 10 வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை திகதி ஜூன் 11 வேட்பு மனுக்களை மீளப்பெறும் கடைசி திகதி ஜூன் 13 ஆகும். ஜூன் 27ஆம் திகதி காலை8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
இந்த வாக்குகள் ஜூன் 30 ஆம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில்தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமுலுக்கு வந்துள்ளது. ஆர்.கே. நகர் தொகுதியுடன் மேகாலயா, கேரளா, மத்திய பிரதேசத்தில் தலா ஒரு சட்டசபை தொகுதிக்கும் திரிபுராவில் 2 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.