Breaking News

ஜெ.யுடன் இன்று பத­வி­யேற்கும் 28 அமைச்­சர்கள்

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெய­ல­லிதா விடு­தலை பெற்று இன்று தமி­ழக முதல்­வ­ராக பதவி ஏற்க உள்ளார். அவ­ருடன் புதிய தமி­ழக அமைச்­ச­ர­வையும் பதவி ஏற்­கி­றது. புதிய அமைச்­ச­ர­வையில் 29 அமைச்­சர்கள் இடம் பெறு­கி­றார்கள்.

கடந்த 7 மாதங்­க­ளாக வழக்­கி­லி­ருந்து ஜெய­ல­லிதா விடு­தலை பெற அ.தி.­மு.க. அமைச்­சர்கள் மற்றும் முக்­கிய பிர­மு­கர்கள் தமி­ழ­கத்தின் அனைத்துக் கோவில்­க­ளிலும் சிறப்பு வழி­பா­டுகள் நடத்தி வேண்­டுதல் செய்து வந்­தனர். இவற்றை கவ­னித்து வந்த ஜெய­ல­லிதா, அமைச்­சர்கள் பலரின் மீது வந்த பல்­வேறு முறைப்­பாடு குறித்தும் பட்­டியல் தயா­ரித்து வைத்­துள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­றது. இதனால் பல அமைச்­சர்­களின் மத்­தியில் பர­ப­ரப்பு நில­வி­யது.

தற்­போ­துள்ள அமைச்­ச­ர­வையில், பெண் தொடர்­பான முறைப்­பா­டு­க­ளுக்கு ஆளா­ன­ வர்கள், அதிக அளவில் ஊழல் குற்­றச்­சாட்­டுக்கு உள்­ளான அமைச்­சர்கள் என்று பட்­டி யல் தனித்­த­னி­யாக தயார் செய்­யப்­பட்­டுள்­ளது என்று தக­வல்கள் வெளி­யாகி இருந்­தன.

இந்­நி­லையில் புதிய அமைச்­ச­ர­வையில் இடம்­பெறும் அமைச்­சர்கள் பெயர் பட்­டி யல்:

1.ஜெய­ல­லிதா (முதல்வர்), 2.பன்னீர் செல்வம், 3.நத்தம் விசு­வ­நாதன், 4.வளர்­மதி, 5. செல்லூர் ராஜு, 6.வைத்­தி­ய­லிங்கம், 7.எடப்­பாடி பழ­னிச்­சாமி, 8.மோகன்,9.தோப்பு வெங்­க­டா­சலம், 10.விஜய பாஸ்கர், 11.அப்துல் ரஹீம், 12.செந்தில் பாலாஜி, 13.கோகுல இந்­திரா, 14.பழ­னி­யப்பன், 15.காமராஜ், 16.வேலு­மணி, 17.வீர­மணி, 18.பூனாட்சி, 19.சின்­னையா, 20.தங்­கையா, 21.ஆர்.பி.உத­ய­குமார், 22.எம்.சி.சம்பத், 23.சுந்தரராஜ், 24.சண்முகநாதன், 25.முக்கூர் சுப்பிரமணியன், 26.ரமணா,27.ஜெயபால், 28.என்.சுப்பிரமணியன், 29.ஆனந்தன்