Breaking News

மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்ற சூர்யா வேண்டுகோள்!

ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘36 வயதினிலே’ படம் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் ஜோதிகா, சூர்யா, இயக்குனர் ரோஜன் ஆண்ட்ரூஸ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சூர்யா பேசும்போது, தனது மனைவியின் ஆசைகளை கணவர் கேட்டு அறிந்துகொள்ளவேண்டும். அவர்களின் ஆசையை நிறைவேற்ற கணவர்கள் முன்வர வேண்டும். திருமணமாக கிட்டத்தட்ட 8 வருடங்களுக்கு பிறகுதான் ஜோதிகா நடித்திருக்கிறார்.

ஆரம்பத்திலேயே நடிக்கவேண்டும் என்ற ஆசை அவருக்குள்ளும் இருந்துள்ளது. ஆனால், அதை வெளிப்படையாக என்னிடம் கூறமுடியாமல் தவித்திருக்கிறார். ஒருகட்டத்தில் அவருடைய ஆசையை தெரிந்துகொண்ட நான் அவரை வைத்து படம் எடுக்க முன்வந்தேன்.

இதேபோல், ஒவ்வொரு கணவர்மார்களும் தனது மனைவியின் ஆசைகளை தெரிந்துகொண்டு, அதை நிறைவேற்ற முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.