Breaking News

ஐ.பி.எல். சூதாட்டத்தில் பாக்.கிற்கும் தொடர்பாம்

ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்­பாக டில்­லியில் அமு­லாக்­கப்­பி­ரிவு அதி­கா­ரிகள் சோத­னையில் ஈடு­பட்­டனர். 

இதில் பாகிஸ்­தானை சேர்ந்த புக்கி ஒரு­வ­ருக்கு தொடர்பு இருப்­பது அம்­ப­ல­மா­னது. ஐ.பி.எல்., ­போட்­டி­களை மைய­மாக வைத்து கடந்த மார்ச் 19ஆம் திகதி குஜ­ராத்தின் வதோ­த­ராவில் சூதாட்டம் செய்த ‘புக்­கிகள்’, ஆம­தாபாத் சிக்­கினர். இதில் தொடர்­பு­டைய 13 நபர்கள் கைது செய்­யப்­பட்­டனர்.

நேற்று மீண்டும் சூதாட்டம் குறித்து டில்­லியில் உள்ள கரோல் பாக், சாஸ்­திரி நகர் மற்றும் குர்­கானில் அமு­லாக்­கப்­பி­ரிவு அதி­கா­ரிகள் சோதனை நடத்­தினர். இவர்­க­ளுடன் ஆம­தாபாத் அதி­கா­ரி­களும் இணைந்­தனர். இதில், 250 கைபேசிகள், 10 மடிக்கணினிகள் கைப்­பற்­றப்­பட்­டன. இந்த சூதாட்­டத்தில் பாகிஸ்­தானை சேர்ந்த ‘புக்கி’ ஒருவருக்கு தொடர்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.