Breaking News

தமிழ்த் திரை­யு­லகம் சார்பில் சென்­னையில் இன்று உண்­ணா­வி­ரதம்!

“டிஜிட்டல்’ கட்­டண உயர்வை கண்­டித்து தமிழ்த் திரை­யு­லகம் சார்பில் இன்று உண்­ணா­வி­ரத போராட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.

இது தொடர்­பாக, தமிழ் திரைப்­பட தயா­ரிப்­பா­ளர்கள் சங்கம், தமிழ்­நாடு திரைப்­பட இயக்­கு­நர்கள் சங்கம், தென்­னிந்­திய நடிகர் சங்கம் மற்றும் தென்­னிந்­திய திரைப்­பட தொழி­லா­ளர்கள் சம்­மே­ளனம் (பெப்சி) சார்­பாக ஒரு கூட்­ட­றிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

அதில், "தயா­ரிப்­பா­ளர்­க­ளிடம் அதிக கட்­டணம் வசூ­லித்து கோடி கோடி­யாக சம்­பா­திக்கும் ‘கியூப்’ மற்றும் 'யு.எப்.ஓ.' போன்ற டிஜிட்டல் நிறு­வ­னங்­களை கண்­டிக்கும் வகையில் தமிழ் திரைப்­பட தயா­ரிப்­பா­ளர்கள் சங்கம், தமிழ்­நாடு திரைப்­பட இயக்­கு­நர்கள் சங்கம், தென்­னிந்­திய நடிகர் சங்கம், தென்­னிந்­திய திரைப்­பட தொழி­லா­ளர்கள் சம்­மே­ளனம் (பெப்சி) மற்றும் திரை­யு­ல­கத்தை சேர்ந்த முன்­னோ­டிகள் அனை­வரும் இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை சென்னை வள்­ளுவர் கோட்டம் அருகில் உண்­ணா­வி­ரதம் இருக்க முடிவு செய்­தி­ருக்­கிறோம்.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை உண்­ணா­வி­ரதம் நடை­பெறும். இதன் நோக்கம் தயா­ரிப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து திரைப்­ப­டங்­களை ‘டிஜிட்டல்’ முறையில் வெளி­யி­டு­வ­தற்­கான கட்­ட­ணத்தை அதி­க­மாக பெற்­றுக்­கொண்டு, அதன் மூலம் திரை­ய­ரங்­கு­களில் விளம்­பரம் மூல­மாக வரு­டத்­துக்கு சுமார் 400 கோடி ரூபாவை தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு வழங்க மறுப்­ப­துடன், ‘கியூப்’, ‘யு.எப்.ஓ’ மற்றும் சில நிறு­வ­னங்கள் பங்­கு­போட்டு கொள்­கின்­றன.

இது தயா­ரிப்­பா­ளர்கள் மற்றும் திரை­யு­ல­கி­னரின் வாழ்­வா­தா­ரத்தை நசுக்க நினைக்கும் செயல். மேற்­கண்ட நிறு­வ­னங்­களின் செயலை தமி­ழக அர­சுக்கு கொண்டு வரும் வகை­யிலும், தயா­ரிப்­பா­ளர்­க­ளுக்கு வர­வேண்­டிய சுமார் 400 கோடி ரூபாவை தர மறுக்கும் நிறு­வ­னங்­களை கண்­டிக்கும் வகை­யிலும் இந்த உண்­ணா­வி­ரதம் நடை­பெ­று­கி­றது. அந்த நிறுவனங்களை தமிழக அரசே ஏற்று நடத்தி, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களையும், திரையுலகின் வாழ்வாதாரத்தையும் மீட்டுத்த ருமாறு கேட்டுக்கொள்கிறோம் " என்று கூறப் பட்டுள்ளது.