Breaking News

மாஞ்சோலை வைத்தியசாலை தாதியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு! இன்றும் தொடரும்

முல்­லைத்­தீவு மாஞ்­சோலை பொது வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்றும் தாதி­யர்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை பணிப்­ப­கிஷ்­க­ரிப் பில் ஈடு­பட்­டனர்.

குறித்த நான்கு சிரேஷ்ட தாதி உத்­தி­யோ­கத்­தர்­களை எது­வி­த­மான பதி­லீடும் இன்றி இட­மாற்­றி­ய­மையை கண­்டித்தே குறித்த வைத்­தி­ய­சாலையில் கட­மை­யாற்றும் தாதி­யர்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை பணிப்­ப­கிஷ்­க­ரிப்பில் ஈடு­பட்­டுள்­ள­துடன் இன்று வெள்ளிக்­கி­ழ­மையும் பகிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­ட­வுள்­ள­தா­க முல்­லைத்­தீவு மாவட்ட அரச தாதி­யர்கள் சங்­கத்தின் தலைவர் சுகிர்ந்­த­ர­ராசா தெரி­வித்தார். தமது கோரிக்­கை­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு கிடைக்­காமல் போனால் தொடர்ச்­சி­ யான பகிஷ்­க­ரிப்பில் ஈடு­ப­டப்­போ­வ­தா­க வும் அவர் கூறினார்.

இது­பற்றி அவர் மேலும் குறிப்­பி­டு­கை யில்,

மாஞ்­சோலை மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­றிய நான்கு சிரேஷ்ட தாதிய உத்­தி­யோ­கத்­தர்கள் எது­வி­த­மான கார­ணங்­க­ளு­மின்றி, கடந்த 25ஆம் திகதி முதல் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள வைத்­தி­ய­சா­லை­களில் கட­மை­களை பொறுப்­பேற்­கு­மாறு தெரி­விக்­கப்­பட்­டது.

குறித்த வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­றி­ய­வர்­களை இட­மாற்றம் செய்யும் போது வைத்­தி­ய­சா­லையில் பதி­லீடு எது­வு­மின்றி, குறித்த இட­மாற்றங்கள் வழங்­கப்­பட்­டுள் ளன. அதே­வேளை, மாவட்ட வைத்­தி­ய­சா ­லையில் கட­மை­யாற்றும் சிரேஷ்ட உத்­தி­யோ­ கத்­தர்கள் இருவர் ஒட்­டு­சுட்டான் பிர­தேச வைத்­தி­ய­சா­லைக்கும், மற்றும் இருவர் புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச வைத்­தி­ய­ சா­லைக்கும் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர்.

எமது ைவைத்­தி­ய­சா­லையில் 64 தாதி­யர் கள் கட­மை­யாற்றி வரு­கின்­றனர். இவர்­க ளில் ஐந்து பேர் சிரேஷ்ட உத்­தி­யோ­கத்­தர்­கள். எனவே, தற்­போது கட­மை­பு­ரியும் 60 தாதிய உத்­தி­யோ­கத்­தர்­களில் ஒரு­வரே சிரே ஷ்ட உத்­தி­யோகத்­த­ராவார்.

எனவே, சிரேஷ்ட உத்­தி­யோ­கத்­தர்கள் இடமாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­மை­யினால் ஏற்­படும் அசௌகரியங்கள் குறித்து பிராந் திய சுகாதார பணிப்பாளர் ஊடாக சம்பந்த ப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி யிருக்கின்றோம். எமது கோரிக்கைகள் நிறை வேற்றப்படாவிட்டால் தொடர்ச்சியான பகி ஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளோம் என் றார்.