Breaking News

தீர்ப்­புக்கு தடை வாங்­கினால் முதல்­வ­ராக முடி­யாது! மீண்டும் ஜெய­ல­லி­தாவை முடக்க முயற்சி

ஜெய­ல­லிதா மீதான சொத்­துக்­கு­விப்பு வழக்கில் கர்­நா­டக உயர் நீதி­மன்றம் அளித்த தீர்ப்­புக்கு தடை வாங்­கினால் ஜெய­ல­லி­தா­வுக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்தும் என்று தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

சொத்­துக்­கு­விப்பு வழக்கில் மே 11ஆம் திகதி, கர்­நா­டக உயர்­நீ­தி­மன்றம் அளித்த தீர்ப்பில் ஜெய­ல­லிதா உள்­ளிட்ட நால்­வரும் குற்­ற­மற்­ற­வர்கள் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டுள்­ளது. இந்த தீர்ப்பில், சிறப்பு நீதி­மன்றம் வழங்­கிய 4 ஆண்டு சிறை தண்­டனை மற்றும் ரூ.100 கோடி அப­ரா­தமும் இரத்து செய்­யப்­பட்­டது. ஆனால், உயர் நீதி­மன்ற நீதி­பதி குமா­ர­சாமி வழங்­கிய தீர்ப்பின் நகலை படித்து பார்த்த சட்ட வல்­லு­நர்கள் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

ஏனெனில், அதில் கூட்டல் கணக்கில் பிழை உள்­ள­தா­கவும், அதனால் ஜெய­ல­லிதா பெற்ற கடன் தொகை மதிப்பு அதி­க­ரித்து காட்­டப்­பட்­டுள்­ளதும் தெரி­ய­வந்­துள்­ளது. நீதி­பதி குமா­ர­சாமி தனது தீர்ப்பில், வரு­மா­னத்­துக்கு அதி­க­மாக 8.12 சத­வீதம் அள­வுக்கு ஜெய­ல­லிதா சொத்து குவித்­தி­ருப்­பதால், அது குற்­ற­மில்லை என்று குறிப்­பிட்­டி­ருந்தார். ஆனால், அந்த எண்­களை சரி­யாக கூட்டிப் பார்த்தால், 76.75 சத­வீதம் அள­வுக்கு கூடு­த­லாக சொத்து குவித்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.

இதை­ய­டுத்து, உட­ன­டி­யாக உச்­ச­நீ­தி­மன்­றத்தில் கர்­நா­டக அரசு மேன்மு­றை­யீடு செய்ய வேண்டும் என்று தமி­ழக எதிர்க்­கட்­சிகள் கோரிக்­கை­வி­டுக்க ஆரம்­பித்­துள்­ளன.

இந்­நி­லையில் அரசு வழக்­க­றிஞர் ஆச்­சா­ரியா இது­கு­றித்து கூறு­கையில், மேன்­மு­றை­யீடு செய்­வது குறித்து இன்னும் அரசு முடி­வெ­டுக்­க­வில்லை என்­ற­போ­திலும், இந்த வழக்கு மேன்­மு­றை­யீட்­டுக்கு உகந்­த­துதான். உச்ச நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்­யும்­போது, உயர் நீதி­மன்ற தீர்ப்­புக்கு இடைக்­கால தடை வழங்க வேண்டும் என்­ப­துதான் முதல் கோரிக்­கை­யாக வைக்­கப்­படும் என்று தெரி­வித்­துள்ளார். உச்­ச­நீ­தி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்ய கர்­நா­ட­கா­வுக்கு 90 நாட்கள் கால அவ­காசம் உள்­ளது.

ஆனால், உயர்­நீ­தி­மன்ற தீர்ப்­புக்கு இடைக்­கால தடை வாங்­கினால், வழக்கை விரைந்து முடிக்க வேண்­டிய கட்­டாயம் குற்­றம்­சாட்­டப்­பட்ட தரப்­புக்கும் வந்­து­விடும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

கணக்கில் பிழை இருப்­பது தெரி­ய­வந்தால், அதை ஆதா­ர­மாக கொண்டு வழங்­கப்­பட்ட தீர்ப்­புக்கும் எளிதில் இடைக்­கால தடை கிடைத்­து­விடும் என்று சட்ட வல்­லு­நர்கள் கூறு­கின்­றனர். மேலும், தீர்ப்­புக்கு தடை விதிக்­கப்­பட்டால், ஜெய­ல­லிதா கீழமை நீதி­மன்றம் அறிவித்தபடி குற்றவாளியாகவே தொடரும் நிலை ஏற்பட்டுவிடும் என்பதால் அரசு பதவிகளை வகிக்க முடியாது. இந்நிலையில், ஜெயலலிதா மீண்டும் முதல்வராக பதவி ஏற்றாலும் அவர் தனது பதவியை மீண்டும் பறிகொடுக்க நேரிடும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.