Breaking News

ஐ.ம.சு.மு. ஆட்­சிக்­கால மோச­டி­களை அம்பலப்படுத்துவேன் பிரதமர் ரணில் சூளுரை


ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்­பெற்ற ஊழல் மோச­டி­களை வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வ­ரு­வதில் எமது புதிய அர­சாங்கம் தீவி­ர­மாக செயற்­பட்டு வரு­கின்­றது. எனினும் நாம் குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­பதில் பின்­னிற்­ப­தாக மக்கள் மத்­தியில் சந்­தேகம் நில­வு­வ­தா­கவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அவ்­வா­றான சந்­தே­கங்கள் தேவை­யற்­றவை என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்தார்.

முன்­னைய ஆட்­சி­யா­ளரின் ஊழல் மோச­டிகள் தொடர்பில் அனைத்து விட­யங்­க­ளையும் நான் வெளிச்­சத்­துக்கு கொண்டு வருவேன் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

சிறி­கொத்­தாவில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில்,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ர­முன்­னணி அர­சாங்­கத்தில் தனியார் மற்றும் அரச துறையில் நடந்­துள்ள மிக மோச­மான ஊழல் மோச­டிகள் தொடர்பில் எமது அர­சாங்­கத்­தினால் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த ஊழல் மோச­டிகள் தொடர்பில் எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்ற சந்­தேகம் மக்கள் மத்­தியில் எழுந்­துள்­ளது. கடந்த அர­சாங்­கத்தின் ஊழல்­களை வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வர விரும்­பாத ஒரு சிலர் பாரா­ளு­மன்­றத்தில் அர்­ஜுன மகேந்­தி­ரனை காரணம் காட்டி எமது செயற்­பா­டு­களை தடுக்­கின்­றனர்.

முன்­னைய அர­சாங்­கத்தில் அனை­வ­ரி­னதும் வாய்கள் கட்­டப்­பட்டு ஊமை அமைச்­சர்­க­ளா­கவே செயற்­பட்­டனர். ஆனால் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் எமது அர­சாங்­கத்தில் ஜன­நா­யகம், கருத்து சுதந்­திரம் மட்­டு­மல்­லாது அமைச்­சர்கள் தமது எண்­ணங்­களை வெளிப்­ப­டை­யாக தெரி­விக்கும் உரி­மை­யையும் வழங்­கி­யுள்ளோம். ஆனால் அதையும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் விரும்­ப­வில்லை.

மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் சர்ச்­சையை உரு­வாக்கி அவர் தொடர்பில் நிதி மோசடி குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்டு அவரை விசா­ரிக்க கோரி­யி­ருந்­தனர். அதற்கு நாம் மதிப்­ப­ளித்து அவர் தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொள்ள விசேட குழு­வொன்றை நிய­மித்து விசா­ர­ணை­களை நடத்­தினோம். அந்த விசா­ரணை முடி­வுகள் எமக்கு கிடைத்­துள்­ளன. அதற்­க­மைய மத்­திய வங்கி ஆளுநர் குற்­ற­வாளி அல்ல என அவர்­க­ளது விசா­ரணை அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த விடயம் தொடர்பில் நேற்று (நேற்று முன்­தினம்) நான் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­விக்க முற்­பட்ட போது பல தடங்­கல்கள் ஏற்­பட்­டன.

மேலும் எமது அர­சாங்­கத்தில் மோச­டிகள் நடப்­ப­தாக கூறும் சிலர் கடந்த அர­சாங்­கத்தில் செய்த மோச­டி­களை மறைக்­கின்­றனர். கடந்த 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் இலங்கை அர­சுக்கு நிதித் திரட்­ட­லுக்­காக 270 பில்­லியன் ரூபாய் பணத்தை திறை­சேரி பிணை முறி சட்­டத்­துக்கு முர­ணான வகையில் வெளி­யி­ட்டிப்­பட்­டி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது. 

இந் நிதி கொடுப்­ப­னவு எவ்­வித அறி­வித்­தலும் இன்றி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் நண்பர் வட்­டா­ரத்­துக்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளமை வெளிச்­சத்­துக்கு வந்­துள்­ளது.விலை மனுக்­கோ­ராது தமது நண்­பர்­க­ளுக்கு மஹிந்த கொடுத்­துள்ளார். ஆனால் இத் தொகை அர­சாங்­கத்தின் நிதியில் சேர்க்­கப்­ப­ட­வில்லை. இந்த விட­யங்கள் தொடர்பில் ஜனா­தி­ப­திக்கு நான் தெரி­வித்­துள்ளேன். கடந்த அர­சாங்­கத்தில் பல ஊழல்கள் இடம்­பெற்­றுள்­ளன. அவற்றை எப்­ப­டி­யேனும் நாம் வெளிச்­சத்­துக்கு கொண்டு வருவோம். அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆட்­சியில் அனைத்து குற்­ற­வா­ளி­க­ளையும் தண்­டிப்­பதே எமது நோக்­க­மாகும் எனக் குறிப்பிட்டார்.