Breaking News

கிளிநொச்சி சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேக நபர் கைது

கிளிநொச்சி பரந்தன் சிவபுரம் பகுதியில் 6 வயது பாடசாலை மாணவியை வன்புணர்விற்கு உட்படுத்திய சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில்; கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 11 விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது. சந்தேக நபருக்கு 15 வயது என்பதால் அவரின் வயதை கருத்தில் கொண்டு அச்சுவேலி சிறுவர் காப்பகம் ஒன்றில் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தநிலையில், எதிர்வரும் 11ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது சந்தேக நபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.