தான் செய்யும் அனைத்து காரியங்களுக்கும் சிலரால் எதிர்ப்பு வௌியிடப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
என்ன பிரச்சினைகள் வந்தாலும் மக்களுக்காக தான் தலைமை ஏற்பேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிபில பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.