Breaking News

மக்களின் காணிகளை மீள கையளிக்கும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்படும்!- சுவாமிநாதன்

படை­யினர் வச­முள்ள வடக்கு, ­கி­ழக்கு மக்­களின் காணி­களை மீளக்கைய­ளிப்­ப­த ற்­கான அனைத்து செயற்­பா­டு­களையும் உட­ன­டி­யாக மேற்­கொள்­ள­வுள்­ள­தாக மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் வட­க்கு, கி­ழக்கு மக்கள் பிர­தி­நி­தி­க­ளிடம் உறு­தி­ய­ளித்­துள்ளார்.

அத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோரின் கவ­னத்­திற்கு குறித்த விட­யத்தைக் கொண்டுசெல்ல இருப்­ப­தா­க வும் எதிர்­வரும் 29ஆம், 30ஆம் திக­தி­க ளில் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்து படைத்தரப்பு, மக்கள் பிர­தி­நி­திகள், அரச அதி­கா­ரிகள் உள்­ளிட்ட அனைத்துத் தரப்­பி­ன­ரு­டனும் கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தா­கவும் அதே­போன்று முதலாம் திகதி கிளி­நொச்சி மாவட்­டத்தில் அனைத்துத் தரப்­பையும் சந்­திக்­க­வுள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம், மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நா­தனை வடக்­கு­கி­ழக்கு தமிழ் பேசும் பிர­தி­நி­திகள் நேற்­றைய தினம் அவ­ரு­டைய அமைச்சில் இரு­வேறு பிரி­வு­க­ளாக சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர். இதன்­போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பு­ட­னான சந்­திப்பு

மீள்­கு­டி­யேற்றம், புனர்­நிர்­மாணம், மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நா­தனை தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தலை­மையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான மாவை.சேனா­தி­ராஜா, செல்வம் அடைக்­க­ல­நாதன், பொன்.செல்­வ­ராஜா, சி.சிறி­தரன், யோகேஸ்­வரன், எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர் மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் நேற்­றைய தினம் சந்­தித்­தனர். இச் சந்­திப்புக் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் கருத்து வெ ளியி­டு­கையில்,

இன்­றைய (நேற்று) தினம் மீள்­கு­டி­யேற்ற அமைச்­சரை சந்­தித்து யுத்­தத்தின் பின்னர் ஆறு ஆண்­டுகள் ஆகியும் எமது மக்கள் இன்­னமும் தமது சொந்த நிலங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டாத நிலையில் இருக்­கின்­றார்கள் என்­பதை சுட்க்­காட்­டினோம். அத்­துடன் எமது மக்­களின் வாழ்­வா­தா­ரத்­திற்கு பெரும் துணை­யாக இருந்த விவ­சா­யத்தை மேற்­கொள்ள முடி­யாது படை­யினர் அந்­நி­லங்­களை கைய­கப்­ப­டுத்தி வைத்­தி­ருக்­கின்­றார்கள் என்­ப­தையும் எடுத்­துக்­கூ­றினோம். அத்­துடன் மக்­களின் நிலங்­களில் இரா­ணுவம் விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்ற நிலைமை வடக்கில் நீடித்­துக்­கொண்டு இருப்­ப­தையும் குறிப்­பிட்டோம்.

அது­மட்­டு­மின்றி தற்­போது வரை வலி.வடக்கு, வளலாய், பர­விப்­பாஞ்சான், சிலா­வத்­துறை, சம்பூர் உட்­பட வட­கி­ழக்கில் படை­யினர் வச­முள்ள நிலங்­களை மீள கைய­ளிப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு கேட்­டுக்­கொண்டோம்.

மேலும் மீள்­கு­டி­யே­றிய மக்­க­ளுக்­கான நிரந்­தர, தற்­கா­லிக வீட­மைப்­புக்கள், வாழ்­வா­தா­ரத்­திட்­டங்கள் ஆகி­யவை தொடர்­பிலும் நாம் அமைச்­ச­ரி­டத்தில் விரி­வாக கலந்­து­ரை­யா­டினோம். மக்­களின் இவ்­வா­றான உட­ன­டிப்­பி­ரச்­சி­னைகள் இன்னும் தீர்க்­கப்­ப­டாத நிலை தொட­ராது உட­ன­டி­யாக உரிய பொறி­முறை மூலம் தீர்வைப் பெற்றுத் தரு­மாறும் கேட்­டுக்­கொண்டோம்.

இதன்­போது குறித்த விடயம் தொடர்பில் தாம் படைத்­த­ரப்பு உள்­ளிட்ட அதி­கா­ரி­க­ளுடன் தொடர்ச்­சி­யாகப் பேச்­சு­வார்த்தை நடாத்தி வரு­வ­தா­கவும் ஜனா­தி­பதி, மற்றும் பிர­தமர் உள்­ளிட்ட உயர் மட்டத் தரப்­பி­னரின் கவ­னத்­திற்குக் கொண்டு சென்­றுள்­ள­தா­கவும் குறிப்­பிட்ட அமைச்சர் எதிர்­வரும் 29ஆம் திகதி முதல் முதலாம் திக­தி­வரை வடக்­கிற்கு நேரில் விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு மக்கள் பிர­தி­நி­திகள், படைத்­த­ரப்பின் அதி­கா­ரிகள், அரச அதி­கா­ரிகள் உள்­ளிட்­டோ­ருடன் கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொள்­ள­வுள்­ள­தா­கவும் பொது மக்­களின் இப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தரத் தீர்­வொன்றை விரைவில் பெற்றுக் கொடுப்­ப­தற்­காக தாம் தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­வ­தா­கவும் குறிப்­பிட்டார்.

அமைச்சர் ரிஷாட், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ்
உள்­ளிட்ட குழு­வி­ன­ரு­ட­னான சந்­திப்பு

வடக்கில் மீள்­கு­டி­யே­றி­யுள்ள மக்கள் வாழ்­வ­தற்கு வீடு­க­ளின்றி பெரும் பிரச்­சி­னை­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். இது தொடர்பில் தாங்கள் உட­னடித் தீர்­வொன்றை வழங்க வேண்­டு­மென இச்­சந்­திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதி­யூதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் கே.என். டக்ளஸ் தேவா­னந்தா, முரு­கேசு சந்­தி­ர­குமார், முத்­த­லி­பாவா பாரூக் ஆகியோர் கூட்­டாக வேண்­டுகோள் விடுத்­தனர்.

மீள்­கு­டி­யேற்ற அமைச்சில் நேற்று இடம்­பெற்ற இச் சந்­திப்புக் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது:

வவு­னியா, மன்னார், முல்­லைத்­தீவு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி ஆகிய மாவட்­டங்­களில் மக்கள் வீடு­க­ளின்றி பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றனர். குறிப்­பாக தற்­கா­லிக வீடு­களை அமைப்­ப­தற்குக் கூட அவர்­களால் முடி­யா­தி­ருக்­கின்­றன.

அதே­நேரம் பொது மக்கள் மீள்­கு­டி­யே­றி­யுள்ள போதும் அவர்கள் தமது வாழ்­வா­தார நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடி­யாத நிலையில் வறு­மைக்குள் சிக்­கி­யுள்­ளனர். இவர்கள் பெரும்­பா­லா­ன­வர்கள் விவ­சாய நட­வ­டிக்­கை­க­ளையே முன்­னெ­டுத்து வந்­தி­ருந்­தனர்.

ஆனால் யுத்­தத்தின் பின்­ன­ரான சூழ்­நி­லையில் இவர்­க­ளு­டைய விவ­சாய நிலங்­களில் படை­யினர் விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். அதே­நேரம் மக்­க­ளுக்குச் சொந்­த­மான நிலங்கள் உயர் பாது­காப்பு வல­யங்­க­ளா­கவும் இரா­ணுவ முகாம்கள் மற்றும் வேறு இரா­ணு­வத்தின் தேவை­க­ளுக்­காக தற்­போதும் பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. இவற்றை படைத்­த­ரப்­புடன் உரிய முறையில் பேச்­சு­வார்த்தை நடாத்தி மீளக்­கை­ய­ளிப்­ப­தற்கு தாங்கள் முன்­வ­ர­வேண்டும் என இப்­பி­ர­தி­நி­திகள் கூட்­டாக கோரினர்.

இதன்­போது கருத்து வெளி­யிட்ட அமைச்சர் சுவா­மி­நாதன்,

இவ்­வி­டயம் தொடர்­பாக நான் படைத்­த­ரப்­பினர், ஜனா­தி­பதி, பிர­தமர் உள்­ளிட்­ட­வர்­க­ளுடன் தொடர்ச்­சி­யாகப் பேச்­சு­வார்த்தை நடாத்தி வரு­கின்றேன். இதன் மூலமே வலி.வடக்கில் ஆயிரம் ஏக்கர் நிலத்தை விடு­விப்­ப­தற்கு உரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு அவற்றில் ஒரு பகுதி மக்­க­ளி­டத்தில் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

அத்­தோடு வட­கி­ழக்கில் படைத்­த­ரப்­பி­ன­ரிடம் காணப்­படும் காணி­களை விடு­விப்­ப­தற்­கு­ரிய செயற்­பா­டு­களைத் தொடர்ச்­சி­யாக முன்­னெ­டுத்து வரு­கின்றேன் என்றார்.

இதன்­போது மீள்­கு­டி­யே­றிய மக்­க­ளுக்­கான வீடு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக விசேட அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்றைச் சமர்ப்­பிக்­கு­மாறு கைத்­தொழில் வணி­கத்­துறை அமைச்சர் ரிஷாட் பதி­யூதீன் கோரி­ய­துடன் வெளி­நாட்டு நன்­கொ­டை­களை இவ்­வா­றான வீட­மைப்புத் திட்­டங்­க­ளுக்­காகப் பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்­பையும் மீள்­கு­டி­யேற்ற அமைச்சர் என்ற வகையில் மேற்­கொள்­ள­வேண்­டு­மென கோரினார்.

அத்­துடன் புத்­தளம் மாவட்­டத்தில் நீண்­ட­கா­ல­மாக இடம்­பெ­யர்ந்து வாழும் முஸ்லிம் மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக உரிய நட­வ­டிக்கை எடுப்­பீர்கள் என நம்­பிக்கை கொண்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்ட அவர் சிலா­வத்­துறை, மறிச்­சுக்­கட்டி, முள்­ளிக்­குளம் போன்ற பிர­தே­சங்கள் உட்­பட ஏனைய பிர­தே­சங்­க­ளிலும் மீள்­கு­டி­யேற்றச் செயற்­பா­டு­களை துரி­த­மாக முன்­னெ­டுக்­க­வேண்­டு­மெ­னவும் கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் டக்ளஸ் தேவா­னந்தா வடக்­கு­கி­ழக்கு மக்­களின் மீள்­கு­டி­யேற்றம் தொடர்­பாக என்­னிடம் தக­வல்கள் உள்­ளன. விசேட அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தைச் சமர்ப்­பிக்கும் யோச­னையை நான் வர­வேற்­கின்றேன் எனக் குறிப்­பிட்டார். அதே­நேரம் வடக்கில் 59 ஆயிரத்து 650 வீடுகள் தேவையாகவுள்ளன. கிழக்கில் 16 ஆயிரம் வரையிலான வீடுகள் தேவையாகவுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான், வலி.வடக்கு உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் இராணுவம் மக்களின் நிலங்களில் தொடர்ந்தும் இருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் வடக்கில் பொது மக்களுக்கு குடிதண்ணீர் பிரச்சினை வெகுவாகக் காணப்படுகின்றமையைச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இப்பிரச்சினைக்குத் தீர்வினைப் பெறுவதற்கு இரணைமடுவிலிருந்து குழாய் வழித் திட்டத்தின்மூலம் யாழுக்கு நீரைக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார். அத்துடன் சமுர்த்திக் கொடுப்பனவுகள் தொடர்பில் காணப்படும் பிணக்குகளுக்குத் தீர்வு எட்டப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.