Breaking News

சுவாமிநாதன், விஜயகலாவினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - ஜீ.எல்.பீரிஸ் குற்றச்சாட்டு

யுத்­தக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக அர­சாங்­கத்தின் தேசிய பொறி­மு­றையை உட­ன­டி­யாக ஏற்­ப­டுத்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட வேண்டும். இல்­லா­விட்டால் இவ்­வி­ட­யத்தில் சர்­வ­தேசம் தலை­யிடும் ஆபத்து உள்­ளது என்று நேற்று சபையில் எச்­ச­ரிக்கை விடுத்த பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் எம்.பி.

அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் விடு­தலை புலி சந்­தேக நபர்­களை விடு­விக்க முயற்­சிக்­கின்றார். மறு­புறம் காயப்­பட்ட புலி­க­ளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்­டு­மென்று அமைச்சர் சுவாமிநாதன் கூறு­கிறார்.இவ்­வாறு நாட்டின் தேசிய பாது­காப்பு அச்­சு­றுத் த­லுக்கு உள்­ளா­கி­யுள்­ள­தென்றும் தெரி­வித்தார்.

செப்­டெம்பர் மாதத்தில் ஐ.நா.மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள அறிக்­கைகள் தொடர்­பா­கவும் நாட்டின் தேசிய பாது­காப்பு தொடர்­பா­கவும் பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் எம்.பி. சபை ஒத்­தி­வைப்பு பிரே­ர­ணையை முன்­வைத்து உரை­யாற்­றும்­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சபையில் பேரா­சி­ரியர் ஜி.எல்.பீரிஸ் மேலும் உரை­யாற்­று­கையில்,

அமெ­ரிக்­காவின் செனட் சபையில் வெளி­நாட்டுக் கொள்­கையை தயா­ரிக்கும் முக்­கிய செனட் சபை உறுப்­பி­ன­ரான பெட்றிக் லேனி ஜூன் 9ஆம் திகதி இலங்கை தொடர்­பாக வெளி­யிட்ட கருத்தில், யுத்த குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக இலங்­கையின் உள்­ளக விசா­ர­ணை­களை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. அதனை நான் நிரா­க­ரிக்­கின்றேன். எனவே உள்­ளக விசா­ர­ணை­களில் சர்­வ­தேச நிபு­ணர்­க­ளுக்கும் இடம் அளிக்­கப்­ப­ட­வேண்டும். அத்­தோடு கண்­கா­ணிப்பு அந்­தஸ்த்து வழங்­கப்­பட வேண்டும் என்று கோரி­யுள்ளார்.

அதில் அவர் முக்­கி­ய­மாக தெரிப்­பது சாட்­சி­யங்­களை பெற்­றுக்­கொள்ளல், சாட்­சி­யங்­களை முன்­வைப்­ப­தற்கு தொழில்­நுட்ப ரீதி­யான பங்­க­ளிப்பு வழங்­கப்­பட வேண்­டு­மென்றும் தெரி­வித்­துள்ளார். இந்த கருத்து பயங்­க­ர­மா­னது. வக்­கி­ர­மாக எமது உள்­ளக விசா­ர­ணையில் தலை­யிடும் சர்­வ­தே­சத்தின் கருத்தே இது­வாகும்.

எனவே இதற்கு இட­ம­ளிக்கக் கூடாது. எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் ஐ.நா.மனித உரிமை ஆணைக்­குழு இலங்கை தொடர்­பாக அறிக்­கையை வெளி­யி­ட­வுள்­ளது. அத்­தோடு இலங்­கையின் தேசிய விசா­ரணை பொறி­முறை தொடர்­பாக கவனம் செலுத்தி வரு­வ­தா­கவும் ஐ.நா . மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் ஆணை­யாளர் நாயகம் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வா­றான சூழ்­நி­லையில் அர­சாங்கம் மெத்­த­னப்­போக்கை கடைப்­பி­டிக்­காது உட­ன­டி­யாக தேசிய விசா­ரணை பொறி­மு­றையை தயா­ரிக்­க­வேண்டும். இல்­லா­விட்டால் உள்­ளக விசா­ர­ணையில் சர்­வ­தேசம் தலை­யிடும் ஆபத்து உரு­வாகும். இன்று நாட்டில் என்ன நடக்­கின்­றது? உலகில் நடக்­காத அதி­ச­யங்கள் இடம்­பெ­று­கின்­றன.

காய­ம­டைந்த விடு­தலை புலி பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நஷ்ட ஈடு வழங்­கப்­பட வேண்­டு­மென அமைச்சர் டி.எம்.சுவாமி நாதன் அமைச்­ச­ர­வைக்கு அமைச்­ச­ரவைப் பத்­தி­ர­மொன்றை முன்­வைத்தார். இதற்கு கடும் எதிர்ப்­புக்கள் விமர்­ச­னங்கள் எழுந்­ததால் அந்த முயற்சி கைவி­டப்­பட்­டது.

மறு­புறம் அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அநு­ரா­த­புர சிறை­யி­லுள்ள புலி சந்­தேக நபர்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்­டு­மென்­கிறார். கடும் போக்­கு­டைய புலி சந்­தேக நபர்­களை எவ்­வாறு விடு­தலை செய்ய முடியும்-?

எனவே இன்று நாட்டின் தேசிய பாது­காப்பு பயங்­க­ர­மான ஆபத்தை எதிர்­நோக்­கி­யுள்­ளது. அது மட்­டு­மல்ல இலங்­கைக்கு எதி­ராக கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைக்கும் வட­மா­கா­ண­சபை முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் வடக்கில் இரா­ணு­வத்­தினர் போதை பொருட்­களை விற்­பனை செய்­வ­தா­கவும் வடக்கில் தமி­ழர்கள் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­ட­தா­கவும் இது தொடர்­பாக சர்­வ­தேச விசா­ரணை அவ­சியம் எனத் தெரி­விக்­கின்றார்.

அது மட்­டு­மல்­லாது வடக்­கி­லி­ருந்து இரா­ணுவம் முழு­மை­யாக வெளி­யேற்­றப்­பட வேண்­டு­மென்­கிறார். ஏன்? எதற்­காக? முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் இவ்­வா­றான கருத்­துக்­களை வெளி­யி­டு­கின்றார். அது தான் ஐ.நா.மனித உரிமை ஆணைக்­குழு செப்­டெம்பர் மாதம் வெளி­யி­ட­வுள்ள இலங்கை தொடர்­பான அறிக்­கையில் மேற்­கண்ட கருத்­துக்­க­ளையும் இணைத்­துக்­கொள்­வ­தற்கு அனைத்து முயற்­சி­க­ளையும் மேற்­கொள்­கின்­றனர்.

புலம்­பெயர் தமி­ழர்கள், அமைப்­பினர் அவர்கள் வாழும் நாடு­களின் அர­சு­க­ளுக்கு அழுத்தம் கொடுக்க கூடிய விதத்தில் பலம் பெற்­ற­வர்கள் அதிக நிதி, வச­தி­யு­டை­ய­வர்கள். ஈழக்­க­னவை கைவி­டா­த­வர்கள்.அத்­தோடு வெளி­நா­டு­களும் இந்த தமிழ் அமைப்­புக்­களின் ஆதரவை எதிர்ப்பார்க்கின்றன. எனவே புலம் பெயர் தமிழர்கள் அமைப்புக்களை இலேசாக கருதிவிடக்கூடாது. 

அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்தின் விடுதலைப்புலிகள் தொடர்பான அறிக்கையையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் எமது நாடு தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் நாமனைவரும் இணைந்து தேசிய பொறிமுறையை தயாரிப்போம். காலத்தை இனியும் கடத்த வேண்டாம் என்றும் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.