Breaking News

தமிழர்களுக்காக குரல்கொடுப்பவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர் - மங்கள விளக்கம்

தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக குரல் கொடுப்­ப­வர்கள் அனை­வரும் பயங்­க­ர­வா­திகள் ஆகி­விட முடி­யாது. ஆனால் கடந்த காலங்­களில் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக குரல் கொடுப்போர் பயங்­கரவாதி­க­ளா­கவே அவ­தா­னிக்­கப்­பட்­டனர் எனத் தெரி­வித்த வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் மங்­கள சம­ர­வீர,

உண்­மை­யான பயங்­க­ர­வா­தி யார்? பிரி­வி­னை­வாதி யார்? அதேவேளை தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்காகக் குரல் கொடுப்போர் யார் என்­பது தொடர்பில் வித்­தி­யா­சப்­ப­டுத்தி அடை­யாளம் காண பொறி­மு­றை­யொன்று நடை­மு­றையில் இருக்க வேண்­டு­மென்றும் அமைச்சர் தெரி­வித்தார்.

பயங்­க­ர­வாதம் மற்றும் உலக பயங்­க­ர­வா­திகள் தொடர்பில் அமெ­ரிக்க இராஜாங்க திணைக்­க­ளத்­தினால் வெளி­யி­டப்­பட்டு நாடுகள் பற்­றிய அறிக்கை தொடர்­பாக எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா 23 இன் கீழ் இரண்டில் பாரா­ளு­மன்­றத்தில் எழுப்­பிய கேள்­விக்கு நேற்று புதன்­கி­ழமை சபையில் பதி­ல­ளித்து உரை­யாற்றும் போதே வெளி­நாட்­ட­லு­வல்கள் அமைச்சர் மங்­கள சமரவீர இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் சபையில் தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

பயங்­க­ர­வாதம் தொடர்­பான அறிக்­கையை அமெ­ரிக்க இராஜாங்கத் திணைக்­களம் இம் மாதம் வெளி­யிட்­டி­ருந்­தது. 2014 ஆம் ஆண்டு தொடர்­பா­கவே இந்த அறிக்கை வெளியி­டப்­பட்­டுள்­ளது.

இது கடந்த மஹிந்­தவின் ஆட்­சியின் கீழ் தற்­போ­தைய எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்­வாவும் அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­ச­ராக பதவி வகித்த காலப்­ப­கு­தி­யாகும். இம் மாதி­ரி­யான அறிக்­கைகள் 2012, 2013 ஆம் ஆண்­டு­க­ளிலும் வெளி­யி­டப்­பட்­டன.

2014 ஆம் ஆண்டில் மலே­சி­யாவில் மொத்­த­மாக 13 விடு­தலைப் புலிகள் ஆத­ர­வாளர்கள் கைதுசெய்­யப்­பட்­டுள்­ள­தாக 2014 ஆம் ஆண்­டுக்­கான அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அதேபோன்று விடு­தலைப் புலிகள் ஆத­ரவு வலை­ய­மைப்பு தொடர்ந்தும் செயற்­ப­டு­வ­தாக 2013 ஆம் ஆண்­டுக்­கான அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த பயங்­க­ர­வாத அச்­சு­றுத்­தலை முற்­றி­லு­மாக ஒழித்து விட்­ட­தாக கூறிய கடந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலத்­தி­லேயே இவை­ய­னைத்தும் இடம்­பெற்­றுள்­ளன.படை­யினர் பயங்­க­ர­வா­தத்தை முடி­வுக்கு கொண்டு வந்­த­தை­ய­டுத்து பயங்­க­வாதம் மீண்டும் தலைதூக்­காமல் தடுப்­ப­தற்கு கடந்த அர­சாங்கம் 2010 ஆம் ஆண்டின் பின்னர் தகுந்த நட­வ­டிக்­கை­களை எடுக்கத் தவ­றி­ய­மை­யையே இந்த அறிக்கை எடுத்துக் காட்­டு­கி­றது.

பயங்­க­ர­வாதம் தொடர்­பான நட­வ­டிக்­கை­களில் ராஜ­பக் ஷ ஆட்­சியின் தோல்­வி­க ­ளையே இந்த அறிக்­கைகள் எடுத்துக் காட்­ டு­கின்­றன. எனவே, இவ் அறிக்­கைகள் எமது அரசை பற்­றி­ய­தல்ல. அதேவேளை அனைத்து வகை­யான பயங்­க­ர­வாதத்திற்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளிலும் எமது அர­சாங்கம் உறு­தி­யாக விருக்­கி­றது என்­பதை இந்த சபைக்கு நான் வலி­யு­றுத்­து­கிறேன்.

பயங்­க­ர­வாதம் தொடர்பில் எப்­போதும் எமது உறு­தி­யான நிலைப்­பாடு இது தான். தடைசெய்­யப்­பட்ட வெளி­நாட்டு பயங்­க­ர­வாத அமைப்­புக்கள் பற்­றிய அமெரிக்க அரசின் பட்­டி­யலில் விடு­தலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் உள்­ள­டக்­கப்­பட்டு வரு­கி­றது.

கடந்த காலங்­களில் விடு­தலைப் புலி­களின் நிதி சேக­ரிப்பு மற்றும் ஆத­ரவு வலை­ய­மைப்­புக்­களை பல­வீ­னப்­ப­டுத்­து­வ­தற்கு இலங்­கையில் பணி­யாற்­றிய நாடு­க­ளு­ட­னாக இராஜ­தந்­திர உற­வு­களை பலப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களில் எமது அர­சாங்கம் ஈடு­பட்­டுள்­ளது.

அத்­தோடு, நிதிசேக­ரிப்பு வலை­ய­மைப்பை முடக்­குதல் உள்­ளிட்ட பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கைகள் தொடர்­பிலும் கடற்­பி­ராந்­திய பாது­காப்பு தொடர்­பிலும் இலங்கை அர­சாங்கம் அமெ­ரிக்­கா­வுடன் புல­னாய்வு உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்­களில் இணைந்து பணி­யாற்றி வரு­கின்­றது.

அதேபோன்று நாட்­டுக்குள் பிர­வே­சிக்க விருக்கும் பய­ணிகள் பற்­றிய தக­வல்­களை இலங்கை குடி­வ­ரவு அதி­கா­ரி­க­ளுக்கு வழங்கும் முன்கூட்­டிய பய­ணிகள் தகவல் முறைமை தொடர்பில் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் குடி­வ­ரவு திணைக்­க­ளத்­துடன் எமது அர­சாங்கம் தொடர்ந்தும் இணைந்து செயற்­பட்டு வரு­கின்­றது.

2006 ஆம் ஆண்டு நான் வெளி­நட்டு அமைச்­ச­ராக இருந்தபோது விடு­தலைப் புலி­களை ஐரோப்­பிய ஒன்­றியம் முதலில் தடைசெய்­தது.

ஆனால் 2014 ஆண்டில் இத் தடை இடை நிறுத்­தப்­பட்­டது. இதன் பின்னர் எமது அரசு ஆட்­சிக்கு வந்­ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் அந்த அமைப்பு மீண்டும் தடைசெய்­யப்­பட்­டது. தங்­க­ளது வன்­முறை நிகழ்ச்சி நிரல்­களை ஊக்­கு­விப்­ப­தற்­கான சட்­ட­வி­ரோத நட­வ­டிக்­கை­களின் ஊடாக நிதிச் சேக­ரிப்பில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுடன் இடம்­பெ­யர்ந்தோர் அல்­லது தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்போர் தொடர்­பான பிரச்­சி­னைகள் பற்றி குரல் கொடுப்­ப­வர்­களை சேர்த்து நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது.

எமது நாடு கடந்த கால வன்­மு­றை­களில் இருந்து சுமு­க­மான நிலை­மைக்கு திரும்­பு­வதில் இந்த வித்­தி­யா­சப்­ப­டுத்தல் முக்­கி­ய­மா­ன­தாகும்.

தமிழர் அர­சி­யலில் மிதவாத குரல்­களும், தமிழ் மக்­களின் நேர்­மை­யான பிர­தி­நி­தி­க­ளு­மான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினர் தற்­போது பிள­வு­படாத ஐக்­கிய இலங்­கையை வலி­யு­றுத்திப் பேசு­கின்­றனர்.

எமது ஜன­நா­யக ஸ்தாப­னங்­களில் முழு­மை­யாக பங்­கு­பற்­று­வ­தற்கு குறித்த நபர்­களைத் தான் நாம் ஊக்­கு­விக்க வேண்டும். எமது சமூ­கத்தில் அடிப்­ப­டை­வாத சக்­தி­களை ஒழிப்­ப­தற்கு இவர்­க­ளுடன் தான் நாம் நெருங்கி சேவை­யாற்ற வேண்டும்.

ஜே.வி.பி.யினர் பிர­தான அர­சியல் நீரோட்­டத்­திற்கு கொண்டுவரப்­பட்­டதைப் போன்று தமிழ் மக்கள் அவர்­க­ளது துய­ரங்­களை அவர்­க­ளால் தெரிவுசெய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் ஊடாக வெளி­யி­டு­வ­தற்கு நம்­ப­க­மான அரச பொறிமுறைகள் மற்றும் வன்­மு­றை­யற்ற ஆத­ர­வா­ளர்கள் மூலம் அம் மக்­களை நாம் தற்­போது வலு­வூட்ட வேண்டும்.

எமது நாட்டில் பாதிக்­கப்­பட்ட சமூ­கங்­களை நாம் தனி­மைப்­ப­டுத்தி தீவி­ர­ம­யப்­ப­டுதப்படுவதால்தான் வெளிப்­படக்கூடிய பயங்­க­ர­வாதத்தின் புதிய வடி­வங்­களை பற்றி எதிர்வு கூறு­வது கஷ்­ட­மாக இருக்கும் என்­ப­துடன் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும் கடி­ன­மா­ன­தாக இருக்கக் கூடும்.

குறிப்­பாக அவை சிறி­ய­வை­யா­கவோ அல்­லது பூகோ­ள­வியல் ரீதி­யாக சித­றுண்டு கிடப்­ப­வை­யா­கவோ இருக்கும் பட்­சத்தில் அவற்­றுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களை இலக்கு வைப்­பது எந்த இரா­ணு­வத்­துக்கும் கடி­ன­மா­ன­தா­கவே இருக்கக் கூடும்.

மோச­மாக திட்­ட­மி­டப்­பட்ட அல்­லது உள்­வாங்­கப்­ப­டாத தந்­தி­ரோ­பா­யங்கள் மற்றும் இரா­ஜ­தந்­திர ரீதி­யி­லான தோல்­விகள் கார­ண­மாக எமது நாட்டின் பாது­காப்பு மற்றும் ஸ்திரத்­தன்­மையை மீண்டும் எம்மால் ஆபத்தில் தள்ள முடி­யாது.

வன்­மு­றை­களின் மூல காரணிகளை தீர்ப்ப தற்கும் உலகளவில் சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை பயன்படுத்துவதற்கும் அந் நாட்டு குற்றவியல் நீதி முறைமையை மேம் படுத்துவதற்கும் அதேபோல் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான வாய்ப்புக்களை அதிக ரிப்பதற்கு இதுதான் சரியான நேரம்.

ஆவே நம்பிக்கையை கட்டியெழுப்புதல் நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி பற்றிய இந்த பயணத்தில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சி தலைவரை நான் கேட்டுக் கொள்கிறேன்.

அனைத்து சமூக மக்களினதும் விசேடமாக வடக்கு, கிழக்கிலுள்ள சிறுபான்மை இன சமூகங்களின் உண்மையான துயரங்கள் மற்றும் கவலைகளை தீர்ப்பதில் எம்முடன் இணைந்து கொள்ளுங்கள். இந்த நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய இதுதான் சரியான வழி என்றார்.