Breaking News

கட்­சியை நான் பிள­வு­ப­டுத்­த­வில்லை - மஹிந்த

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை நான் பிள­வு­ப­டுத்­த­வில்லை. கட்­சியை வலுப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­யையே மேற்­கொண்டு வரு­கின்றேன் என்­று முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

கலா­வெவ 500 ஏக்கர் பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கட்­சியை நான் பிள­வுப்­ப­டுத்த முயற்­சிப்­ப­தாக சிலர் என் மீது குற்றம் சுமத்­து­கின்­றனர். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை வலுப்­ப­டுத்­தவே நான் வெளியில் இறங்கி பேசி வரு­கிறேன். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை பிள­வுப்­ப­டுத்­தினேன் என்று என்­மீது குற்றம் சுமத்தி பய­னில்லை.

அம்­மா­விடம் இருந்து மகள் கட்­சியை உடைத்து கொண்டு சென்ற போது நான் கட்­சி­யி­லேயே இருந்தேன். மகன் கட்­சியை உடைத்து கொண்டு சென்ற நேரத்­திலும் நான் கட்­சி­யி­லேயே இருந்தேன். பொதுச் செய­லாளர் சென்ற நேரத்­திலும் நான் கட்­சி­யி­லேயே இருந்தேன். கட்­சியை பிள­வுப்­ப­டுத்­தி­யது நானல்ல.

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி என்­பது டாலி வீதியில் 301 ஆம் இலக்­கத்தில் இருக்கும் கட்­டிடம் அல்ல. அறி­விப்பு பல­கை­யல்ல. சின்னம் அல்ல. 1991 ஆம் ஆண்­டிற்கு பிறகு நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கைச்­சின்­னத்தில் போட்­டி­யி­ட­வில்லை. 91 ஆம் ஆண்டே இறு­தி­யாக கைச்­சின்­னத்தில் போட்­டி­யிட்டோம். இந்த வர­லாறு மறந்து போய்­விட்­டது. மக்­க­ளுக்கும் மறந்து விட்­டது. நாமும் மறந்து விட்டோம். அர­சி­யல்­வா­தி­களும் மறந்து விட்­டனர். தற்­போது ஸ்ரீலங்கா, ஸ்ரீலங்கா என்று வாயில் வந்­தது போல் சத்­த­மி­டு­கின்­றனர்.

நாட்டின் பஞ்ச மகா சக­திகள் எங்கே. மக்­களின் இத­யங்­க­ளி­லேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாளுகிறது. கொள்கைகளிலேயே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாளுகிறது என மஹிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.