Breaking News

எத்­த­கைய சவால்கள் நேர்ந்­தாலும் சம்பூர் மக்­களை சொந்த காணியில் குடி­யேற்­றுவோம் - சம்­பந்தன்

சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு எத்­த­கைய சவால்கள் வந்­தாலும் தடைகள் நேர்ந்­தாலும் அந்த மக்­களை அவர்­களின் சொந்­தக்­கா­ணி­களில் மீள்­கு­டி­யேற்­றியே தீருவோம் என தமிழ்த் ­தே­சி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் விசேட வர்த்­த­மானி அறி­வித்­த­லுக்கு உச்ச நீதி­ மன்­றத்தால் விதிக்­கப்­பட்ட இடைக்­கால உத்­த­ரவு வாபஸ் பெறப்­பட்­டதைத் தொடர்ந்து தமது காணி­களை துப்­பு­ரவு செய்­த­வர்­களும் தற்­கா­லிக கொட்­டில்­களை அமைத்து அங்கு தங்­கி­யி­ருந்­த­வர்­களும் பொலி­ஸாரால் வெளி­யேற்­றப்­பட்­டமை தொடர்பிலேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரி­விக்­கையில்

சம்பூர் வர்த்­தக வலயம் சார்பில் உச்ச நீதி­மன்றம் வழக்­கொன்று இருப்­பதன் கார­ண­மாக தமது காணி­களை துப்­பு­ரவு செய்­யச்­சென்ற மக்­களை பொலிஸார் தடுத்­தி­ருக்­கலாம். வெளியார் நுழை­வதை தடுக்கும் வகையில் பொலிஸார் கட­மையை செய்­தி­ருக்­கலாம். சம்பூர் வர்த்­தக வலயம் சம்­பந்­த­மாக வழக்­கொன்று தாக்கல் செய்­தி­ருக்­கின்ற கார­ணத்­தினால் அவ்­வ­ழக்­குக்­கான தீர்வு எவ்­வா­றா­யினும் வந்­துதான் ஆக வேண்டும்.

சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் பாரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்டு வந்­துள்­ளன. அமைச்­ச­ர­வையில் சம்பூர் மக்கள் மீள்­கு­டி­யேற்றம் செய்­யப்­பட வேண்­டு­மென்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதனை தொடர்ந்து முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷ­வினால் வெளி­யி­டப்­பட்ட வர்த்­த­மானி அறி­வித்தல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் இரத்­துச்­செய்­யப்­பட்­டுள்­ளது.

அர­சாங்கம் சம்பூர் மீள்­கு­டி­யேற்றம் சம்­பந்­த­மாக தீவி­ர­மான முடி­வு­களை மேற்­கொண்டு அதை அமுல்­ப­டுத்த முன்­வந்­துள்­ளது. அதனால் சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்தை விரைவில் செய்து முடிக்க வேண்­டிய தேவை அர­சாங்­கத்­திற்கு இருக்­கின்­றது. அந்த விவ­கா­ரத்தை தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு கட்­டாயம் செய்­விக்கும். அது நடந்தே தீரும். எக்­கா­ரணம் கொண்டும் எமது முயற்சி தோல்­வி­யுற நாம் விடப்­போ­வ­து­மில்லை. விடவும் மாட்டோம். இவ்­வி­வ­காரம் தொடர்­பாக சம்பூர் மக்­களோ ஏனை­ய­வர்­களோ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை.

சம்பூர் மக்கள் தமது காணியில் குடியேறுவார்கள். வர்த்தக வலயக்காணியில் மக்கள் குடியேற்றப்படுவதை தொடர்ந்து கடற்படை முகாமாகவுள்ள 237 ஏக்கர் காணியிலும் மக்கள் விரைவாக குடியேற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.