Breaking News

சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிளவுபடு­வ­தற்கு மஹிந்­தவே கார­ணம் - குற்­றம் சாட்­டு­கிறார் சந்­தி­ரி­கா

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்சி இரண்­டாக பிள­வு­ப­டு­வ­தற்கு முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே பிர­தான கார­ண­ மாகும். 

எனது தாயா­ரது காலத்­தி­லி­ருந்து அவரே கட்­சியை பிள­வு­ப­டுத்தும் பிர­தான வகிப்­பா­ள­ராக செயற்­பட்­டுள்ளார். எவ்­வா­றா­யினும் இலங்கை அர­சி­யலில் கட்­சிப்­பி­ளவு என்­பது சாதா­ரண விட­ய­மாகும் என்­று அக் கட்­சியின் பிர­தான ஆலோ­ச­கரும் முன்னாள் ஜனா­தி­ப­தி­யு­மான சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவே ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு சுதந்­தி­ர­மாக செயற்­ப­டக்­கூ­டிய சூழலை உரு­வாக்­கி­யுள்­ள­மையை மஹிந்த ராஜ­பக் ஷவின் ஆத­ர­வாளர்கள் நினைவில் வைத்து செயற்­ப­ட­வேண்டும் எனவும் அவர் கோரினார். மேலும் இலங்கை வர­லாற்றில் இது­வ­ரை காலமும் இல்­லாத அள­வுக்கு கடந்த 9 ஆண்­டு­களின்போது கடன் அதிக­ளவில் பெற்­றுக்­கொண்டு, மஹிந்த ராஜ­பக் ஷ நாட்டின் பொரு­ளா­தா­ரத்தை சீர்­கு­லைத்­துள்ளார். 

அத்­துடன் நிதி ஒதுக்­கீடு இல்­லாமல் அபி­வி­ருத்தி பணி­களை ஆரம்­பித்­துள்ளார். முன்­னைய அரசின் செயற்­பாட்­டினால் தற்­போ­தைய அர­சாங்கம் பாரி­ய­ளவில் சிக்­கல்­க­ளுக்கு முகங்­க­கொ­டுக்க நேரிட்­டுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

கொழும்பு கோட்­டை­யி­லுள்ள நிதி அமைச்சில் முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்கா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்­க­விற்கும் நிதி அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்­க­விற்கும் இடையில் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது. குறித்த சந்­திப்பின் பின்னர் இரு­வரும் ஒன்­றி­ணைந்­து ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்றை ஏற்­பாடு செய்திருந்­த­னர். இதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

இது தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மேலும் அங்கு குறிப்­பி­டு­கையில்,

கடந்த ஒன்­பது ஆண்­டு­களில் நாட்டின் பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்பில் எனக்கு திருப்­தி­யில்லை. முன்­னைய அரசின் பொரு­ளா­தார கொள்­கை­யினால் நாட்­டிற்கு பாதிப்­புகள் ஏற்­ப­ட­லா­யிற்று. முன்­னைய அரசின் மீதான மனித உரிமை மீறல்கள் தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டு­களின் கார­ண­மாக சர்­வ­தேச நாடு­களை சேர்ந்­த­வர்கள் இலங்­கை­யுடன் முத­லீடு செய்­ய­வில்லை.

முன்­னைய அர­சினால் விட்­டு­சென்ற பொரு­ளா­தா­ரத்தை தற்­போ­தைய அரசா­ங்கம் பொறுப்­பேற்­ற­மை­யினால் பல்­வேறு சவால்­க­ளுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டி­யேற்­பட்­டுள்­ளது.

தற்­போது இலங்­கையின் பொரு­ளா­தாரம் பெரு­ம­ளவில் சீர்­கு­லைந்­துள்­ளது. முன்­னைய ஆட்­சியின் போது எந்­த­வொரு கேள்விக் கோரல்கள் இல்­லாமல் அபி­வி­ருத்தி திட்­டங்கள் தர­கு­தா­ரர்­க­ளுக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் முன்­னைய அர­சாங்­கத்­தினால் ஆரம்­பிக்­கப்­பட்ட பெரும்­பா­லான அபி­வி­ருத்­தித்­திட்­டங்­க­ளுக்கு உரிய வகையில் நிதி ஒதுக்­கி­டப்­பட்­டி­ருக்­க­வில்லை.

இதே­வேளை என்­னு­டைய ஆட்­சிக்­கா­லத்தின் போது இலங்­கையின் ஆறு அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­க­ளுக்­காக சீன அர­சாங்­கத்­துடன் குறைந்­த­ள­வி­லான தரகு பணத்­திற்கு முத­லீடு செய்­யப்­பட்­டது.

இதன்­போது நாம் மிகவும் தர­மான நிறு­வ­னங்க­ளு­ட­னே­யே ஒப்­பந்­தினை மேற்­கொண்டோம். இருந்த போதிலும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவின் கைக­ளுக்கு அதி­காரம் சென்­றதன் பின்னர் குறித்த ஆறு அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளையும் 80 சத­வீத தரகு பணத்­திற்கு சர்­வ­தேச தர­மற்ற சீன நிறு­வ­னத்­திடம் கைய­ளிக்கப்­பட்­டுள்­ள­து.

இதன்­பி­ர­காரம் நுரைச்­சோலை அனல் மின் நிலை­யத்­திற்கு மாத்­திரம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவின் அர­சாங்­கத்­தினால் 510 பில்­லியன் ரூபா தரகு வழங்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் இலங்கை வர­லாற்றில் எந்­த­வொரு அர­சாங்­கமும் கடன் பெறாத அள­விற்கு 9 சத­வீதம் சர்­வ­தேச நாடு­க­ளி­லி­ருந்து மஹிந்த ராஜபக்ஷ அர­சாங்கம் கடன் பெற்­றுள்­ளது. முன்­னைய அர­சாங்­கத்தின் பொரு­ளா­தார கொள்­கையின் கார­ண­மாக தற்­போ­தைய அரா­சாங்கம் பாரிய சிக்­க­லுக்கு முகங்­கொ­டுத்து வரு­கின்­றன.

ஐ.தே.கவுடன் இணைய மாட்டேன்

நான் முன்­னைய அர­சாங்­கத்­திற்கு எதி­ராக செயற்­பட்­ட­மை­யா­னது எந்த சந்­தர்ப்­பத்­திலும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு ஆத­ர­வாக செயற்­பட்­ட­மைக்கு ஒப்­பா­காது. நான் எந்த சந்­தர்ப்­ப­திலும் ஐக்­கிய தேசியக் கட்­சி­யுடன் இணை­யப்­போ­வ­தில்லை. முன்­னைய அர­சாங்கம் என்­னு­டைய கட்­சி­யாக இருந்த போதிலும் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் மீது நான் மிகவும் அக்­கறை கொண்­டவள்.

ஆகையால் எனது கொள்­கையை என்­றைக்கும் விட்­டுக்­கொ­டுக்­கப்­போ­வ­தில்லை. நான் கொள்­கையை கட்­டிக்­காப்­பதில் மிகவும் அக்­கறை கொண்­டவள். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தனது கொள்­கையை தொடர்ந்தும் மீறிக்­கொண்டே வந்­துள்­ளது. தற்­போது அந்த நிலைமை மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டுள்­ளது.

சுதந்­திரக் கட்­சியின் பிளவு

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் பிளவு ஏற்­பட்­ட­மையை எண்ணி வருந்­து­கிறேன். இந்த கட்சிப் பிள­வு­க­ளுக்­கெல்லாம் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே பிர­தான கார­ண­மாகும். எனது தாயார் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவின் பிர­ஜா­வு­ரிமை முன்னாள் ஜனா­தி­பதி ஜே.ஆர். ஜெய­வர்­த­ன­வினால் இல்­லாமல் இரத்துச் செய்­யப்­பட்ட போது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்­தி­ர­பால சேன­நா­யக்க உள்­ளிட்ட 13 பேர்களை இணைந்துக் கட்­சியை பிள­வுப்­ப­டுத்த முனைந்­தனர். எனினும் அந்த காலப்­ப­கு­தியில் கட்­சியில் சிரேஷ்ட தலை­வர்கள் இருந்­த­மை­யினால் கட்சி பாது­காக்­கப்­பட்­டது. எனி­னும தற்­போது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் சிரேஷ்ட உறுப்­பி­னர்கள் எவரும் இல்லை.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன போன்று ஜன­நா­யக பண்பு கொண்ட தலைவர் தற்­போது கிடைத்­துள்­ள­மை­யினால் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யி­ன­ருக்கு சுதந்­திரம் கிடைத்­துள்­ள­மையை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவிற்கு ஆத­ர­வாக செயற்­பட கூடி­ய­வர்கள் நினைவில் வைத்துக் கொள்­வது மிகவும் முக்­கி­ய­மாகும்.

கல்வித் தகை­மை­யற்­றோரே பாரா­ளு­மன்­றத்தில்

இதே­வேளை தற்­போ­தைய பாரா­ளு­மன்­றத்தில் கல்வித் தகை­மை­யற்­றோரே பாரா­ளு­மன்­றத்தில் உள்­ளனர். அத­னை­வி­ட பெரு­ம்­பா­லோனோர் போதைப்­பொருள் விற்பனையாளர்களே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மேலும் நாட்டில் அபிவிருத்தி செயற்த்திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு பதிலாக போதைப்பொருள் வர்த்தகத்திற்கே அதிகளவில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாகும்.

மஹிந்தவின் மீதான விசாரணைகள் துரிதம்

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான நிதி மோசடிகள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் தற்போது நல்லாட்சி நிலவுவதனால் சட்டத்திற்கு மதிப்பளித்து அதற்கேற்றால் போலவே விசாரணைகள் நிறைவுபெறும். வெ ள்ளை வேன் கலாசாரம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என்றார்.