Breaking News

சுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது குடா­நாட்டு தமி­ழர்­களின் கட­மை­யாம் - சம்பந்தன் வலியுறுத்தல்

கூட்­ட­மைப்பின் யாழ். மாவட்ட வேட்­பாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனை பாரா­ளு­மன்றம் அனுப்­பு­வது தமி­ழர்­களின் கட­மை­யாகும் என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் வலி­யு­றுத்­தினார்.

26ஆம் திகதி மாலை பருத்­தித்­துறை நட­ராஜா கலை­ய­ரங்கில், பருத்­தித்­துறை நக­ர­சபைத் தலைவர் சபா ரவீந்­திரன் தலை­மையில் நடை­பெற்ற தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தேர்தல் பரப்­புரைக் கூட்­டத்தில் உரை­யாற்­றிய போதே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரை­யாற்­றிய அவர், அடுத்து அமை­ய­வி­ருக்­கின்ற பாரா­ளு­மன்றம் ஒரு ஸ்திர­மான பாரா­ளு­மன்­ற­மாக அமையும் என்று எதிர்­பார்க்­கப்­படும் நிலையில், தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­களை தீர்த்துக் கொள்­வ­தற்­கான தீர்க்­க­மான சந்­தர்ப்பம் ஒன்று உரு­வாகும் என்று நாங்கள் நம்­பு­கின்றோம். அந்தச் சந்­தர்ப்­பத்தில் பாரா­ளு­மன்­றத்தில் சுமந்­திரன் போன்­ற­வர்­களின் பங்­க­ளிப்பு மிக அதி­க­மாக தேவைப்­படும்.

தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை இரா­ஜ­தந்­திர ரீதி­யாக அணுகி தீர்­வு­களைப் பெற்றுக் கொள்­வதே தற்போ­தைய காலத்தில் எல்­லோ­ராலும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றதும், ஏற்றுக் கொள்­ளப்­பட்­ட­து­மான அணுகு முறை­யாகும். தேசிய ரீதி­யிலும், சர்­வ­தேச ரீதி­யிலும் இந்த அணு­கு­மு­றைக்கு மகத்­தான வர­வேற்பு இருக்­கின்­றது. இதற்­க­மைய, தமிழ் மக்­க­ளு­டைய பிரச்­சி­னை­களை இரா­ஜ­தந்­திர ரீதி­யாக அணு­கு­வதில் சுமந்­திரன் கடந்த காலங்­களில் மகத்­தான பங்­க­ளிப்பை வழங்கி இருக்­கின்றார். தொடர்ந்தும் வழங்கி வரு­கின்றார். தேசிய ரீதி­யிலும், சர்­வ­தேச ரீதி­யிலும் எங்­க­ளு­டைய பிரச்­சி­னை­களைக் கூறி, அவற்­றுக்­கான தீர்­வு­களை எடுத்­து­ரைக்­கின்ற சந்­தர்ப்­பத்தில், சட்ட நுணுக்­கமும், அறி­வுப்­பின்­பு­லமும் உள்ள சுமந்­திரன் போன்­ற­வர்கள் பாரா­ளு­மன்­றத்தில் இருக்க வேண்­டிய தேவை உள்­ளது என்றும் குறிப்­பிட்டார்.

இக்­கூட்­டத்தில் உரை­யாற்­றிய தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா, வடக்குக் கிழக்கில் தமிழ் மக்­க­ளு­டைய ஒட்­டு­மொத்த வாக்­க­ளிப்பின் பய­னாக நாம் சுமந்­தி­ரனை கடந்த பாரா­ளு­மன்­றத்­திற்கு அனுப்­பினோம். வலி­கா­மத்தின் காணிப்­பி­ரச்­சி­னை­களை சட்ட ரீதி­யாக அணு­கு­வது முதல், சம்­பூரின் காணிப் பிரச்­சி­னை­களை சட்ட ரீதி­யாக வென்­றெ­டுப்­பது வரை சுமந்­திரனின் பங்­க­ளிப்பு மிக மகத்­தா­னது. அது மாத்­தி­ர­மின்றி இறுதி யுத்­தத்தில் தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களை சர்­வ­தேச அரங்­கிலே அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட ஒரு விட­ய­மாக மாற்றியமைத்த பெருமையும் சுமந்திரனையே சாரும்.

தமிழ் மக்களின் உணர்வுகள், பிரச்சி னைகள் போன்றவற்றை தெளிவாகப் புரிந்து கொண்டு, அவற்றிற்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளைப் பெறுவதை நோக்கி செயலாற்றுகின்ற ஒருவரே சுமந்திரன் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.