Breaking News

ஊழல்,மோசடிக்கு எதிரான சட்டங்கள் வலுப்படுத்தப்படும்: ரணில்

ஊழல் மோசடிகளில் ஈடுபட்டோருக்கு எதிராக பதவிகள் மற்றும் தகுதிகள் பாராமல் சட்ட நடவடிக்கை எடுக்கப் பின்வாங்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மாத்தறை – திக்வெல்ல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் குறிப்பிட்டார். ஊழல், மோசடிகளை தவிர்ப்பதற்கு தேவையான சட்டங்களை இலங்கையில் வலுப்படுத்தவிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இதற்காக பொதுத் தேர்தலின் பின்னர் நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெற்று, ஐக்கிய நாடுகளின் ஊழல்களுக்கு எதிரான விசேட அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். எவர் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டாலும், அவர்களைப் காப்பாற்றும் சூழலே தற்போது காணப்படுவதாக தெரிவிக்கும் பிரதமர் அதனை மாற்றியமைப்பதாகவும் குறிப்பிட்டார்.