Breaking News

மேர்வின் சில்வா இராஜினாமா

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் களனி தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.


ராஜபக்ஸ குடும்பத்தின் சதித்திட்டங்களுக்கு உள்ளாகியுள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியை தற்போது கட்சியின் தலைவர் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே மீட்டெடுக்க முடியும் என மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை உயர்த்தி வைப்பதற்கு செயற்பட்ட சிலரும் பசில் ராஜபக்ஸவும் வேட்பு மனு வழங்கும் செயற்பாட்டை தமது பொறுப்பில் எடுத்து செயற்பட்டமையினால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக மேர்வின் சில்வா ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் பொதுச் செயலாளரின் வீட்டில் நடைபெற்ற சந்திப்பிற்கு பசில் ராஜபக்ஸ சென்றிருந்தமையை இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் காணக்கிடைத்தமை அதற்கு சிறந்த உதாரணம் என்றும் மேர்வின் சில்வா கூறியுள்ளார்.