Breaking News

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறைவு!

தபால் மூல வாக்களிப்புகளுக்கான விண்ணப் பங்களை சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் நிறை வடைகின்றது என தேர்தல் செயலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வேட்பு மனுக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, தேர்தல் பிரசார பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், வாக்காளர்களை தயார்படுத்தும் பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர் அட்டைகளை அச்சிட்டு வெளியிடும் நோக்கில் அரச அச்சகம் தற்போது மும்முரமாக செயற்பட்டு வருவதாக அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.