Breaking News

ரி-20 போட்டியிலும் பாகிஸ்தானிடம் மண் கௌவியது இலங்கை!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 29 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. 

போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. 

பாகிஸ்தான் அணி சார்பில் அஹமட் செசாட், சொயிப் மலிக், உம்ரக் அக்மல் ஆகியோர் தலா 46 ஓட்டங்களைப் பெற்றனர்.  இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் திசர பெரேரா 2 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு 176 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியை தழுவிக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் சில்வா 31, சிறிவர்த்தன 35, கப்புகெதர 31 ஓட்டங்களைப் பெற்றனர். பாகிஸ்தான் சார்பில் சொஹைல் தன்விர் 3 விக்கெட்களையும் அன்வர் அலி 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். போட்டியின் ஆட்ட நாயகனாக சொஹைல் தன்விர் தெரிவு செய்யப்பட்டார்.