Breaking News

எக்னெலிகொட சம்பவத்தை புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைக்க முயற்சி

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்தை விடுதலைப் புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைப்பதற்கு முயற்சித்து வருவதாக ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது பற்றி கருத்து வெளியிடப்பட்டுள்ளது. எக்னெலிகொடவிற்கு நியாத்தை வழங்குவோம் என்ற தொனிப் பொருளில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டிருந்தது.

எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பிலான செய்தி அறிக்கையிடலின் போது, நியாமான முறையில் ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டுமெனவும் கோரப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைதுகள் இடம்பெற்ற போது இந்த அமைப்பு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ் திணைக்களத்திற்கு வாழ்த்துக்களைத்தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.