சர்வதேச காணாமல் போனவர்களின் தினம் இன்று
யுத்தம் மற்றும் ஏனைய காரணங்களினால் காணாமல் போனவர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் தொடர்பான தகவல்களை திரட்டிக் கொள்வதற்கான ஒரு முயற்சியாகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
காணாமல் போனவர்களை கண்டறிவதில் சிலவேளை காலதாமதம் ஏற்படலாம் என்பதனாலும், அவர்களின் குடும்பத்தினருக்கு சரியான பதில் ஒன்றை வழங்குவதற்கு முடியாமல் போகும் நிலை உள்ளது.
இதனால், காணாமல் போனவர்களின் குடும்பத்தினரின் தேவைகள் அதிகமாகும் என சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் இலங்கை கிளை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இதேவேளை, ஸ்ரீலங்காவில் கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி இன்று லண்டனில் பேரணியொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.