Breaking News

பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும்

இலங்கை குறித்த புதிய யோச­னைகள் எவையும் பொறுப்­புக்­கூ­றுதல், குறித்த இலங்கை மக்­களின் சொந்த தேவை­களை நிறை­வேற்­று­வதை நோக்­க­மாக கொண்டு அமைந்­தி­ருக்­க­வேண்­டும் என்று அமெ­ரிக்­காவின் யுத்த குற்ற விவ­கா­ரங்­க­ளிற்­கான முன்னாள் தூதுவர் ஸ்டீபன் ரெப் தெரி­வித்­துள்ளார்.

எனினும் எந்த யோச­னையும் இலங்­கையின் சகல சமூ­கத்­த­வர்­க­ளு­டனும் மேற்­கொள்­ளப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களை அடிப்­ப­டை­யா­ன­தாக கொண்டு உரு­வாக்­கப்­ப­டு­வது அவ­சியம். ஜெனீ­வா­வி­லி­ருந்து வரும் மின்­னஞ்­ச­லிற்கு பதில் அளிப்­ப­தற்­காக வெளி­யி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்டு நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் விட­ய­மாக அது அமை­ய­மு­டி­யாது எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது

செப்­டம்பர் 2009 இல் இரா­ஜாங்க திணைக்­க­ளத்தில் இணைந்­து­கொண்ட காலப்­ப­கு­தி­யி­லி­ருந்து இலங்கை விவ­கா­ரத்தில் நான் ஆழ்ந்த அக்­க­றையை கொண்­டி­ருந்தேன்.யுத்­தத்தின் இறுதி தரு­ணங்­களில் இரு தரப்பும் இழைத்­தி­ருக்க கூடிய யுத்த குற்­றங்கள் குறித்து அறிக்­கைiயை சமர்ப்­பிக்­கு­மாறு எனக்கு ஆணை­வ­ழங்­கப்­பட்­டி­ருந்­தது.

2009 ஓக்­டோபர் நடுப்­ப­கு­தியில் நான் இடைக்­கால அறிக்­கை­யொன்றை சமர்ப்­பித்­த­துடன், அதன் பின்னர் செனட் விடுத்த வேண்­டு­கோளின் பேரில் சில அறிக்­கை­கைளை சமர்ப்­பித்தேன்,இலங்கை அதி­கா­ரிகள் நேர்­மை­யான விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க தவ­றி­யுள்­ளனர் என நான் குறிப்­பிட்­டி­ருந்தேன்.

உள்­நாட்டு நடை­மு­றை­க­ளிற்கு அழுத்தம் கொடுப்­ப­தற்­காக நான் இரு­த­ட­வைகள் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்டேன்.2014 ஜன­வ­ரியில் நான் மீண்டும் விஜயம் மேற்­கொண்­ட­வேளை எனது விஜ­யத்­திற்கு எதி­ரா­க­பா­ரிய ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­றன கொழும்பில் உள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்­திற்கு அருகில் நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

எனது முகத்தை பிசாசின் முகத்தை போல சித்­த­ரிக்கும் பாரிய சுவ­ரொட்­டி­களை காண­மு­டிந்­தது. நான் உலக சமா­தா­னத்­திற்கு ஆபத்­தா­னவன் என தெரி­விக்கும் வாச­கங்கள் அதில் காணப்­பட்­டன. அவர்கள் நான் யாழ்ப்­பா­ணத்தில் இருந்த வேளை கொழும்பில் ஆர்ப்­பாட்­டங்­களை மேற்­கொண்­டனர், நான் கொழும்­பிற்கு வந்­த­வேளை அனைத்தும் அமை­தி­யாக காணப்­பட்­டது.

இலங்கை விவ­கா­ரத்தில் நான் அமெ­ரிக்­காவில் உள்ள சகாக்­க­ளுடன் இணைந்து தீவி­ர­மாக பாடு­பட்டேன். ஜெனீ­வா­விற்கு இரு பிரே­ர­ணை­கைளை கொண்­டு­வந்தோம் மனித உரிமை ஆணை­யாளர்pன் விசா­ர­ணையை கோரும் பிரே­ர­ணையை வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றினோம்,குறிப்­பிட்ட விசா­ரணை அறிக்கை அடுத்த சில வாரங்­களில் வெளி­யா­கலாம்.

மனித உரிமை ஆணை­யாளர் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்வார் என நான் எதிர்­பார்க்­கின்றேன். பொறுப்­புக்­கூறல் மற்றும் மனி­த­உ­ரி­மை­க­ளுக்­காக உறு­தி­யாக நிற்­க­வேண்டும் என்ற எமது தீர்­மா­னத்­திற்கு வெற்­றி­கி­டைத்த ஓரு சந்­தர்ப்­ப­மாக இதனை நான் காண்­கிறேன்,

விடு­த­லைப்­பு­லி­க­ளிற்கு எதி­ரான யுத்­தத்­தின்­போது, பொது­மக்­க­ளிற்கு எதி­ராக பாரிய குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்ட அமைப்­பிற்கு எதி­ராக வலு­வான படை­ப­லத்தை அவ­சி­ய­மா­னது என நாங்கள் கரு­து­கின்றோம்.

அதே­வேளை அத்­த­கையை செயற்­பா­டுகள் யுத்­தங்­க­ளிற்­கான சட்­டங்­களை கருத்­தி­லெ­டுப்­ப­வை­யாக அமைந்­தி­ருக்­க­வேண்டும்,யுத்தம் குறித்த சட்­டங்கள் பின்­பற்­றப்­ப­டுதல் என்­பதை அடிப்­ப­டை­யாக வைத்து அவற்­றை­நோக்­க­வேண்டும்.

மோத­லுடன் எவ்­வ­கை­யிலும் தொடர்­பு­ப­டாத மக்கள் வேண்­டு­மென்றே இலக்­கு­வைக்­க­பட்­டது, மற்றும் சர­ண­டைந்­த­வர்கள் படு­கொலை செய்­யப்­பட்­டது குறித்து நாங்கள் குறிப்­பாக ஆழந்த கவ­லை­கொண்­டுள்ளோம். எனது அலு­வ­லகம் வெளி­யிட்ட அறிக்­கையில் இவை குறித்து தெளி­வாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

எங்­க­ளது நிலைப்­பாடும்,அர­சாங்­கத்­து­டனும், சகல சமூ­கங்­க­ளு­டனும் நாங்கள் மேற்­கொண்ட தொடர்­பா­டல்­களும்,முன்­னைய அர­சாங்­கத்­தி­லி­ருந்து மாறு­பட்ட விதத்தில் செயற்­படும் தலை­மைத்­துவம் அவ­சியம் என இலங்கை மக்கள் தீர்­மா­னிக்கும் நிலையை ஏற்­ப­டுத்­தின என நாங்கள் கரு­து­கின்றோம்.

நான் தற்­போ­தைய யோச­னை­களை இன்னும் ஆரா­ய­வில்லை.எனினும் எந்த யோச­னையும் இலங்­கையின் சக­ல­ச­மூ­கத்­த­வர்­க­ளு­டனும் மேற்­கொள்­ளப்­பட்ட கலந்­து­ரை­யா­டல்­களை அடிப்­ப­டை­யா­ன­தாக கொண்டு உரு­வாக்­கப்­ப­டு­வது அவசியம்.ஜெனீவாவிலிருந்து வரும் மின்னஞ்சலிற்கு பதில் அளிப்பதற்காக வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் விடயமாக அது அமையமுடியாது.

பொறுப்புக்கூறுதல்,உண்மையை ஏற்படுத்துதல், இவற்றிற்கு அதிகளவிற்கு காரணமான தனிநபர்களை விசாhரணை செய்தல்,குற்றங்கள் தனிநபர்களாலேயே இழைக்கப்பட்டன. சமூகங்களால் இல்லை என்ற அடிப்படையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் போன்ற இலங்கையர்களின் சொந்த தேவைகளிற்கு பதிலளிப்பவையாக இந்த யோசனைகள் அமைந்திருக்கவேண்டும்.