Breaking News

ஜெனிவா விரை­கி­றது இலங்கை தூதுக்­குழு!

ஜெனி­வாவில் அமைந்­துள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமைகள் பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்ள இலங்கை தூதுக்­கு­ழு­வினர் ஜெனிவா விரைந்த வண்ணம் உள்­ளனர்.

ஜெனிவாக் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்ள நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ நேற்­றைய தினம் இரவு ஜெனிவா நோக்கி பய­ண­மாக ஏற்பாடாகியிருந்தது. அத்துடன் இன்று சனிக்கிழமை அதிகாலை வெளி விவகார அமைச்சர் மங்கள சமரவீரவும்

ஜெனிவாவுக்கு பயணமாவதற்கு ஏற்பாடாகியிருந்தது. நாளை மறு­தினம் ஆரம்­ப­மாகும் ஜெனிவாக் கூட்டத் தொடர் எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்­கையின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மற்றும் நீதி­ய­மைச்சர் விஜே­தாச ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான உயர்­மட்ட குழு­வி­னரே இம்­முறை கலந்­து­கொள்­ள­வுள்­ளனர். அத்­துடன் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­களும் வெளி­வி­வ­கார அமைச்சின் உயர் அதி­கா­ரி­களும் ஜெனிவாக் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இதே­வேளை இம்­முறை கூட்டத் தொடரின் இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை ஒன்றை நடத்­து­மாறு ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் கோரிக்கை விடுக்­க­மாட்டார் என்றும் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. உள்­ளக விசா­ரணை பொறி­மு­றை­யினை முன்­னெ­டுக்க கால அவ­காசம் வழங்கும் நோக்கில் இந்த கோரிக்­கையை ஆணை­யாளர் விடுக்­க­மாட்டார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முதல் நாள் அமர்வில் உரை­யாற்­ற­வுள்ள ஐக்­கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் இலங்கை குறித்து பிரஸ்­தா­பிக்­க­வுள்ளார். அத்­துடன் அன்­றைய தினம் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் உரை­யாற்­றுவார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இதேவேளை ஜெனிவா செல்லும் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் , விஜயதாச ராஜபக்ஷவும் நாளை மறுதினம் திங்கட் கிழமை ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹூசைனை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தவுள்ளனர்.

இம்­முறை ஜெனிவா கூட்டத் தொட­ரா­னது இலங்­கைக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாக அமைந்­துள்­ளது. இலங்கை தொட­ரபில் ஜெனிவா மனித உரிமை அலு­வ­ல­கத்­தினால் நடத்­தப்­பட்ட விசா­ர­ணை­அ­றிக்கை மீதான விவாதம் இம்­முறை கூட்டத் தொடரில் நடை­பெ­ற­வுள்­ள­துடன் இலங்­கைக்கு ஆத­ர­வாக அமெ­ரிக்கா பிரே­ரணை ஒன்­றையும் கொண்­டு­வ­ர­வுள்­ளது.

மனித உரிமை விவ­கா­ரங்­களில் முன்­னேற்­றத்தை வெளிக்­காட்டும் நோக்கில் உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை முன்­னெ­டுப்­ப­தற்கு இலங்­கைக்கு போதிய கால அவ­காசம் ஒன்றை வழங்­க­வேண்டும் என்ற நோக்கில் இந்த பிரே­ர­ணையை அமெ­ரிக்கா கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக அமெ­ரிக்கா அறி­வித்­துள்­ளது.

இதே­வேளை இந்தக் கூட்­டத்­தொ­ட­ரின்­போது இல­ங­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்­கையின் புதிய அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­முறை தொடர்­பா­கவும் விளக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

எதிர்­வரும் 30 ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இலங்கை விசா­ரணை அறிக்கை மீதான விவா­தத்தில் அமெ­ரிக்கா, பிரிட்டன், சீனா, ரஷ்யா, ஜப்பான், தென்­னா­பி­ரிக்கா, இந்­தியா உள்­ளிட்ட நாடுகள் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்­ளன. விவா­தத்தின் இறு­தியில் இலங்­கையின் சார்பில் அமைச்சர் மட்­டத்தில் ஒருவர் பதி­ல­ளிப்பார் என்றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

இலங்­கைக்கு எதி­ராக கடந்த 2014 ஆம் ஆண்டு அமெ­ரிக்கா இறு­தி­யாக கொண்­டு­வந்த பிரே­ர­ணையின் பிர­கா­ரமே போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­லகம் விசா­ரணை நடத்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.

இலங்­கையில் பொறுப்­புக்­கூ­ற­லையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஊக்­கு­வித்தல் என்ற தலைப்­பி­லான இந்தப் பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் பிரே­ர­ணையை எதிர்த்து 12 நாடு­களும் வாக்­க­ளித்­தன. அத்­துடன் 12 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்­து­கொள்­ளாமல் நடு­நிலை வகித்­தி­ருந்­தன.

நல்­லி­ணக்க ஆணைக்­குழு கவனம் செலுத்­திய காலப் பகு­தியில் இலங்­கையில் இரு­த­ரப்­பி­ன­ராலும் இழைக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­றங்கள் மற்றும் மோச­மான மனித உரிமை மீறல்கள், துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பாக ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் விரி­வான சுதந்­தி­ர­மான விசா­ர­ணையை மேற்­கொள்ள வேண்டும் என்று குறித்த பிரே­ர­ணையில் கோரப்­பட்­டி­ருந்­தது.

இந­நி­லையில் ஐ.நா. மனித உரிமை அலு­வ­லகம் இலங்கை குறித்த விசா­ர­ணையை முடித்­துள்­ள­துடன் கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடு­களின் 28 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வி­ருந்­தது. எனினும் இலங்­கையின் ஆறு­மாத கால நல்­லாட்சி அர­சாங்­கத்தின் கோரிக்­கைக்கு அமைய அந்த அறிக்கை பிற்­போ­டப்­பட்­டது.

ஆனால் செப்­டெம்பர் மாதம் நடை­பெறும் ஐ.நா. மனித உரிமை அலு­வ­ல­கத்தின் 30 ஆவது கூட்டத் தொடரில் இந்த அறிக்கை கட்­டாயம் சமர்ப்­பிக்­கப்­படும் என கூறப்­பட்­டது. இந்­நி­லையில் விசா­ர­ணையின் அறிக்கை சில தினங்­களில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு கைய­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. அத்­துடன் எதிர்­வரும் 30 ஆம் திகதி இலங்கை தொடர்­பான அறிக்கை தொடர்பில் விவாதம் நடத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

அத்­துடன் முதல் நாள் அமர்­வின்­போது உரை­யாற்­ற­வுள்ள ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் ஐக்­கிய நாடுகள் பொதுச் செயலர் பான் கீ மூன் உள்­ளிட்­ட­வர்கள் இலங்கை குறித்து பிரஸ்­தா­பிக்­க­வுள்­ளனர். அத்­துடன் அன்­றைய தினம் அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவும் உரை­யாற்­ற­வுள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்­கைக்கு எதி­ராக ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஒரு பிரேரணை கொண்டுவரப்பட்டது. அந்த பிரேரணைக்கு ஆதரவாக 26 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் நடுநிலை வகித்தன.

கடந்த 2013 ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் ஒரு பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக 31 நாடுகளும் எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. ஒரு நாடு நடுநிலை வகித்தது . ஆனால் இம்முறை இலங்கைக்கு ஆதரவாத பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.