Breaking News

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்குமாறு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தினை புனரமைத்துத் தாருங்கள் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரினாலும் ஆழிப் பேரலையினாலும் முல்லைத்தீவு நகரம் பேரழிவுகளைக் கண்டது.முல்லைத்தீவின் நகரத்தின் நுழைவாயிலான வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமலுள்ளது. இப்பாலத்தினை புனரமைப்பதன் மூலமாக முல்லைத்தீவு நகரம் பெரும் வளர்ச்சியடையுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழுவும் மூன்று மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு மாவட்டச் செயலருடன் நடாத்திய சந்திப்பில் வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்பட வேண்டுமென்ற முக்கிய கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது