Breaking News

நாடு முழுவதிலும் மின்சாரத்தடை விசாரணைகள் ஆரம்பம்

நாடு முழுவதிலும் நிலவிய மின்சாரத் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மின்சாரத் தடை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டியவின் உத்தரவிற்கு அமைய இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது.

நேற்றைய தினம் இரவு சுமார் அரை மணித்தியாலம் நாடு முழுவதிலும் மின்சாரத் தடை ஏற்பட்டது. திடீரென நாடு முழுவதற்கும் எவ்வாறு மின்சாரம் தடைப்பட்டது இது ஓர் நாச வேலையா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.