Breaking News

ஐ.நா பொதுச் சபை கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; 30ஆம் திகதி ஜனாதிபதி உரை

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 70ஆவது கூட்டத் தொடர் நியூயோர்க்கில் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.


நியுயோர்க் நேரப்படி காலை 9.45ற்கு ஆரம்பம நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா பிரதிநிதிகள் குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

 ''சமாதானம், பாதுகாப்பு மற்றும் மனித உரிமை ஆகியவற்றின் கீழ் எதிர்கால பயணம்" என்ற தொனிப்பொருளில் இம்முறை பொதுச் சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இன்று பரிசுத்த பாப்பரசர், ஐ.நா பொதுச் யலாளர் நாயகம், அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுச் சபையில் உரை நிகழ்த்தவுள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 30 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையில் உரை நிகழ்த்தவுள்ளார்.

பொதுச் சபைக் கூட்டத் தொடரில் பங்கேற்கும் ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.