Breaking News

சர்வதேச விசாரணைக்கான சாத்தியம் இல்லை இலங்கைக்கு ஆதரவாக அமெரிக்கா!

ஐக்­கிய நாடுகள் சபை மனித உரி­மைகள் பேர­வையின் 30 ஆவது கூட்­டத் ­தொடர் நாளை திங்­கட்­கி­ழமை ஜெனீ­வாவில் ஆரம்­ப­மா­க­வுள்­ளது. எதிர்­வரும் இரண்டாம் திகதி வரை நடை­பெ­ற­வுள்ள குறித்த அமர்வில் இலங்கை விவ­காரம் பிர­தான இடம் வகிக்­க­வுள்­ளது. 

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல் தொடர்­பி­லான அறிக்­கையை எதிர்­வரும் 30 ஆம் திகதி மனித உரி­மைகள் ஆணை­யாளர் செய்யத் அல் ஹுஸைன் சமர்ப்­பிக்­க­வுள்ளார். எனி னும் இந்த அறிக்கை 30 ஆம் திக­திக்கு முன்­னரே சமர்ப்­பிக்கப்பட­லா­மெ­னவும் தெரிய வரு­கி­றது. குறித்த அறிக்­கையில் சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்­தாது உள்­ளக விசா­ர­ணைக்­கான பொறி­முறை உள்­ள­டக்­கப்­ப­ட லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

இந்தக் கூட்டத் தொடரில் கலந்­து­கொள்­வ­தற்­காக இலங்கை அரசின் சார்பில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர,

நீதி மற்றும் பௌத்த விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ தலை­மை­யி­லான குழு­வினர் ஜெனீ­வாவை சென்­ற­டைந்­துள்­ளனர். இதே­வேளை, வன்னி மாவட்ட எம்.பி.யும் குழுக்­களின் பிரதித் தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் இம்­மாதம் 25 ஆம் திகதி பார்­வை­யா­ள­ராக இம்­மா­நாட்­டுக்கு செல்­ல­வுள்ளார். மேலும் வட­மா­காண உறுப்­பி­னர்­க­ளான எம்.கே.சிவா­ஜி­லிங்கம் (ரெலோ) அனந்தி சசி­தரன் (தமி­ழ­ர­சுக்­கட்சி) ஆகி­யோரும் ஜெனீவா செல்­ல­வுள்­ளனர். இதே­வேளை தமி­ழ­ர­சுக்­கட்சி சார்பில் சட்­டத்­த­ர­ணிகள் அடங்­கிய குழு­வினர் ஜெனிவா சென்­றுள்­ளனர்.

இலங்­கையில் இறு­திக்­கட்ட யுத்தம் நடை­பெற்ற போது மனித உரிமை மீறல் சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தாகக் குறிப்­பிட்டு, அமெ­ரிக்கா , மனித உரிமைப் பேர­வையில் 2012 , 2013, 2014 ஆம் ஆண்­டு­களில் இலங்­கைக்­கெ­தி­ராக பிரே­ரணை கொண்­டு­வந்­தது. எனினும் இறு­தி­யாக 2014 ஆம் ஆண்டில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வா­கவே இந்த அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்­ளது.

2014 ஆம் ஆண்டு அமெ­ரிக்கா மனித உரிமைப் பேர­வையில் முன்­வைத்த பிரே­ர­ணைக்கு ஆத­ர­வாக 23 நாடு­களும் எதி­ராக 12 நாடு­களும் வாக்­க­ளித்­தன.12 நாடுகள் வாக்­க­ளிப்பில் கலந்து கொள்­ளாது நடு­நிலை வகித்­தன.

எனவே குறித்த பிரே­ர­ணைக்கு இணங்க மனித உரிமை அலு­வ­லகம் இலங்­கையில் மனித உரிமை மீறல் இடம்­பெற்­றுள்­ளதா? என்­பது குறித்து கண்­ட­றியும் நட­வ­டிக்­கை­யினை ஏற்­க­னவே நிறை­வு­செய்­தி­ருந்­தது. அந்த அறிக்கை கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­டரில் வெளி­யி­டப்­ப­ட­வி­ருந்­தது.

ஆயினும் இலங்­கையில் ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் பின்னர் புதிய அர­சாங்கம் வேண்­டிக்­கொண்­ட­தற்­கி­ணங்க அவ்­வ­றிக்கை செப்­டெம்பர் மாதத்­திற்கு பிற்­போ­ட­பட்­டது.

தமிழ் மக்கள் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்­வ­தேச விசா­ரணை நடை­பெற வேண்டும் என போரு­கின்ற வேளையில் வெளி­யி­டப்­ப­ட­வுள்ள அறிக்­கையில் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றையை முன்­வைப்­ப­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள் அதி­க­ளவில் நில­வு­வ­தாகத் தெரிய வரு­கி­றது.

கடந்த காலங்­களில் இலங்­கைக்கு எதி­ராக பிரே­ர­ணை­களை முன்­வைத்த அமெ­ரிக்கா தற்­போது இலங்­கைக்கு ஆத­ர­வாக செயற்­ப­டு­கி­றது. இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர் இங்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த அமெ­ரிக்­காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஷ்வால் இங்குள்ள பல தரப்பினருடனும் பேச்சுவார்ததைகளை நடத்தியிருந்தார்.

இதேவேளை நாளை ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவான பிரேரனை ஒன்றை முன்வைக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.