Breaking News

முத்­த­ரப்பு அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டுள்ள அமெ­ரிக்கப் பிரே­ரணை

இலங்கை விவ­காரம் தொடர்பில் அமெ­ரிக்­கா­வினால் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள பிரே­ர­ணையின் இறு­தி­வ­டி­வ­மா­னது முத்­த­ரப்பு அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அமெ­ரிக்கப் பிரே­ர­ணை­யா­னது போர்க்­குற்­றச்­சாட்­டுக்கள் குறித்து உள்­ளக விசா­ர­ணை­யையே வலி­யு­றுத்­த­வேண்­டு­மென இலங்கை தரப்பில் அழுத்தம் தெரி­விக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இதே­வேளை இலங்­கைக்கு ஆத­ர­வாக ரஷ்யா, சீனா, இந்­தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் கரம்­நீட்­டி­யுள்­ளன. அத்­துடன் ஐரோப்­பிய நாடு­களும், கன­டாவும் அமெ­ரிக்­கப்­பி­ரே­ர­ணை­யா­னது சர்­வ­தேச நீதி­ப­திகள் அடங்­கிய விசா­ர­ணையை நடத்­த­வேண்டும் என அழுத்­தம்­ பி­ர­யோ­கித்­து­வ­ரு­கின்­றன.

இந்த வகையில் அமெ­ரிக்கப் பிரே­ரணை எவ்­வாறு அமை­யு­மென்­பது தொடர்பில் பலரும் கவனம் செலுத்தத் தொடங்­கி­யுள்­ளனர்.பெரும்­பாலும் இலங்­கையின் வலி­யு­றுத்­தல்கள் கவ­னத்தில் கொள்­ளப்­பட்டே அமெ­ரிக்கப் பிரே­ரணை மனித உரிமைப் பேர­வையில் தாக்கல் செய்­யப்­ப­டு­மென எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

அமெ­ரிக்கப் பிரே­ர­ணையின் நகல்­திட்ட வரை­பா­னது உறுப்பு நாடு­க­ளுக்கு விநி­யோ­கிக்கப்­பட்­டுள்­ளது. 26 பந்­தி­களைக் கொண்­டுள்ள இந்த திட்­ட­வ­ரை­பா­னது இலங்கை அர­சாங்­கத்­திற்கும் இரக­சி­ய­மான முறையில் அனு­ப்பப்­பட்­டுள்­ளது.

இலங்கை விவ­காரம் தொடர்­பா­ன அமெ­ரிக்க பிரே­ர­ணை­யா­னது வலு­வி­ழக்­கப்­படும் சாத்­தி­யமே காணப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.எதிர்­வரும் முதலாம் திகதி அமெ­ரிக்க பிரே­ரணை மீதான வாக்­கெ­டுப்பும் நடத்­தப்­ப­ட­வுள்­ளது.

அமெ­ரிக்­காவின் இலங்கை தொடர்­பான நகல் பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் கடந்த திங்கட் கிழமை முழு­மை­யாக நிரா­க­ரித்­தி­ருந்­தது.குறித்த பிரே­ர­ணை­ வ­ரை­பா­னது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையில் பாரிய எதிர்­ம­றை­யான தாக்­கங்கள் ஏற்­ப­டு­மென ஜெனி­வா­வுக்­கான இலங்­கையின் வதி­விடப்பிர­தி­நிதி ரவி­நாத ஆரியசிங்க தெரி­வித்­தி­ருந்தார்.

இதே­வேளை ஐ.நா.மனித உரி­மைகள் பேர­வையில், இலங்கை தொடர்­பான அமெ­ரிக்­காவின் தீர்­மான வரைவு அடுத்த வாரமே சமர்ப்­பிக்­கப்­படும் என்று ஜெனிவா தக­வல்கள் தெரி­வித்­தன.

இந்த தீர்­மான வரைவு குறித்து, கடந்த இரண்டு தினங்­க­ளாக ஜெனி­வாவில் இரண்டு முறை­சாரா கூட்­டங்­களை நடத்­திய அமெ­ரிக்கா, உறுப்பு நாடுகள், மனித உரிமை அமைப்­பு­க்களின் கருத்­துக்­களைக் கேட்­ட­றிந்­தது.

இந்தக் கூட்­டங்­களின் போது, இலங்­கைக்கு ஆத­ர­வான சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கியூபா போன்ற நாடுகள், தீர்­மான வரைவு பல­வீனப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்றும், சர்­வ­தேச தலை­யீட்­டுக்கு வழி­வ­குக்கும் பந்­திகள் நீக்­கப்­பட வேண்டும் என்றும் வலி­யு­றுத்­தின.

அதே­வேளை, ஐரோப்­பிய நாடு­களும், கன­டாவும் தீர்­மான வரை­வுக்கு பல­மான ஆத­ரவை வெளிப்­ப­டுத்­தி­ய­துடன், அதனை மேலும் வலுப்­ப­டுத்­தவும் கோரின.இந்தநி­லையில், அமெ­ரிக்கா நடத்­திய இரண்­டா­வது உப­குழுக் கூட்­டத்தில் ஒரு­மித்த கருத்து எட்­டப்­ப­ட­வில்லை. அமெ­ரிக்கா திருத்­தப்­பட்ட இரண்­டா­வது தீர்­மான வரைவை இன்று உறுப்புநாடுகள் மத்­தியில் விநி­யோ­கிக்­கலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

அனைத்து நாடு­களின் ஆத­ர­வுடன் தீர்­மா­னத்தை நிறை­வேற்ற விரும்பும் அமெ­ரிக்கா, மீண்டும் நாளை வெள்­ளிக்­கி­ழமை மற்­றொரு முறை­சாராக் கூட்­டத்­துக்கு ஒழுங்குசெய்­துள்­ளது.ஜெனி­வாவில் உள்ள ஐ.நா.தலை­மை­ய­கத்தின் 22ஆவது அறையில், வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் 2 மணியில் இருந்து 4 மணி வரை இந்த முறைசாரா கலந்துரையாடலை நடத்த அமெரிக்கா ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னரே, அமெரிக்கா இறுதித் தீர்மான வரைவை தயாரித்து, அடுத்த வாரமே அதனைப் பேரவையில் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.முன்னதாக, இன்று அல்லது நாளை அமெரிக்க தீர்மான வரைவு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப் படும் என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப் பிடத்தக்கது.

கடந்த 16 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலு வலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கையில் இலங்கையில் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக் கிய

கலப்பு விசேட நீதிமன்றம் ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டு மென பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. எனினும் சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட கலப்பு நீதிமன்றத்தை இலங் கையில் ஏற்படுத்துவதா? இல்லையா என்பது தொடர்பில் ஜனவரி மாத இறுதியில் தீர்மானம் எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார்.