Breaking News

மஹிந்தவுடன் இருந்த மோசடி கூட்டமே இன்றைய அரசிலும் உள்ளது - சரத் ­பொன்­சேகா

மஹிந்த ராஜ­பக்­ச ஷவுடன் இருந்த ஊழல் மோசடி செய்த கூட்­டமே இந்த அர­சாங்­கத்­தையும் சுற்­றி­யி­ருக்­கின்­றது என ஜனா­நாயக கட்­சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா தெரி­வித்தார். 

மட்­டக்­க­ளப்பில் வெள்ளிக்கிழமை நடை­பெற்ற மக்கள் சந்­திப்பில் உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். மட்­டக்­க­ளப்பு கூட்­டு­றவு மண்­ட­பத்தில் கட்­சியின் மாவட்ட அமைப்­பாளர் எஸ்.எச்.எம்.சாபி தலை­மையில் நடை­பெற்ற சந்­திப்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த சரத் பொன்­சேகா 

நாட்டில் மக்கள் எதிர்­பார்த்த நல்­லாட்சி இன்னும் மல­ர­வில்லை. அர­சாங்கம் மக்கள் எதிர்­பார்த்த திசையில் செல்­ல­வேண்­டு­மானால் மஹிந்­த­வுடன் ஒட்­டி­யி­ருந்­த­வர்கள் தோற்­க­டிக்­கப்­ப­ட­ வேண்டும். எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி சபை தேர்­தலில் ஜனா­நா­யக கட்சி நாடு­மு­ழு­வ­திலும் தனித்து போட்­டி­யி­டு­வ­தெ­னவும் முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. மஹிந்த ராஜபக்ஷவை தோற்­ற­க­டித்­தது நான்தான்.

மஹிந்­தவை சுற்­றி­யி­ருந்த பலர் இப்­போது இந்த அர­சாங்­கத்­தையும் சுற்­றி­யுள்­ளனர். அவர்­க­ளையும் தோற்­க­டிக்­க­வேண்டும். மஹிந்­தவை தோற்­க­டித்த எனக்கு அவர்­களை தோற்­க­டிப்­பது பெரிய­வி­ட­ய­மல்ல. இந்­தக்­கட்சி ஐக்­கிய தேசியக் கட்சி போன்ற பழைய கட்­சி­யல்ல இந்­தக்­கட்சி ஒரு குழந்தை. இப்­போ­துதான் வளர ஆரம்­பித்­துள்­ளது. இதனை வளர்த்­தெ­டுக்க வேண்டும். அதற்­காக மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நீங்கள் அர்ப்­ப­ணிப்­புடன் வேலை செய்ய வேண்டும் என்றார். இதில் மேல் மாகாண சபை உறுப்பினர் இந்திக பண்டார உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.