Breaking News

ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை 2 வாரத்தில்

பாரிய லஞ்ச, ஊழல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளவென நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இதுவரை மேற்கொ ள்ளப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பிலான இடைக்கால அறிக்கையொன்றை இன்னும் ஓரிரு வாரங்களில் ஒப்படைக்கவுள்ளதாக செயலாளர் லஸில் டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் இதுவரை இரண்டு இடைக்கால அறிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, ஜனாதிபதி ஆணைக்குழு நாளை காலி, துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள அவென்கார்ட் கப்பல் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.