Breaking News

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளார்!

இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகியுள்ளார். 

மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர் லயனல் பெர்னாண்டோ இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இவ்வாறு பதவியை ராஜினாமா செய்துள்ளார். அண்மையில் மனித உரிமை ஆணைக்குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். 

தலைவராக தீபிகா உடுகம நியமிக்கப்பட்டதுடன், உறுப்பினர்களாக சாலிய பீரிஸ், கஸாலி ஹ_செய்ன், ஏ.சற்குணநாயகம் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர் என தெரிவிக்கப்படுகிறது.