Breaking News

மாணவர் மீதான தாக்குதல் நல்லாட்சியின் ஜனநாயகத்துக்கு எடுத்துக் காட்டு

ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக வாக்குறுதிகளை அள்ளிவீசி ஆட்சிக்கு வந்த நல்லாட்சிக்கான அரசாங்கம் உயர் டிப்ளோமா மாணவர்களின் மீது கட்டவிழ்த்து விட்டு நடாத்திய தாக்குதல் மூலம் ஜனநாயகத்தின் தன்மையை உலகிற்கு உணர்த்தியுள்ளதாக முற்போக்கு சமசமாஜக் கட்சியின் அரசியல் பீட உறுப்பினர் புபுது ஜயகொடி தெரிவித்துள்ளார்.

மாணவர்களை இலக்கு வைத்து பொலிஸாரை அனுப்பி அரசியல்வாதிகள் மேற்கொண்ட இந்த மிலேச்சத்தனமாக தாக்குதலை மிக வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட மாணவர்கள் உடனடியாக எந்தவித ஒப்பந்தங்களும் இன்றி விடுவிக்கப்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.