Breaking News

அரசியல்வாதிகளை மாணவர்கள் வணங்கக் கூடாது – மங்கள சமரவீர

நாட்டின் அரசியல்வாதிகளை மாணவர்கள் வணங்கக் கூடாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.அண்மையில் மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அறநெறிப் பாடசாலைக்குச் சென்றாலும்இ பாலர் பாடசாலைக்குச் சென்றாலும்இ உயர்தர மாணவர்களின் கருத்தரங்கு ஒன்றுக்குச் சென்றாலும் மாணவ மாணவியர் மண்டியிட்டு வணங்குகின்றனர்.

எனினும் அரசியல்வாதிகளை வணங்கக் கூடாது.

தம்மை மாணவர்கள் மண்டியிட்டு வணங்கிய போதிலும்இ தாம் போதைப் பொருள் விற்பனைஇ பாலியல் தொழில் மையம்இ எதனோல் விற்பனை அல்லது வேறும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றேனா என்பது யாருக்கும் தெரியாது.எனவே தெரியாத எவரையும் வணங்குவதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும். அரசியல்வாதிகள் வணங்கப்படக் கூடியவர்கள் அல்ல.

நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசியல்வாதிகளை கௌரவப்படுத்துவதில் தவறில்லைஇ கை கூப்பியோ அல்லது கைலாகு செய்தோ எமது மரியாதையை செலுத்த முடியும்.எனினும் மண்டியிட்டு வணங்க வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்