Breaking News

பாராளுமன்றத்துக்கு தெரிவானவர்களில் அதிகமானவர்கள் ஊழல்வாதிகள்

இம்முறை பாராளுமன்றத்துக்கு தெரிவான வர்களில் அதிகமானவர்கள் திருடர்கள் மற்றும் ஊழல்வாதிகள் என, ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். 

திருகோணமலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

மேலும் இவ்வாறானவர்கள் அதிக விருப்பு வாக்குகளுடன் பாராளுமன்றத்துக்கு தெரிவானமை குறித்து மக்களே பொறுப்பேற்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.