Breaking News

நிலக்கீழ் மாளிகைகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதனால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கிடையாது

ஜனாதிபதி மாளிகைகளில் காணப்படும் நிலக் கீழ் மாளிகைகள் பற்றிய விபரங்களை வெளியிடுவதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்துல் ஏற்படாது என இராணுவம் அறிவித்துள்ளது.


இவ்வாறு நிலக் கீழ் மாளிகைகள் தொடர்பில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டமை எந்த வகையிலும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையாது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.


அப்போதைய பாதுகாப்பு நிலமைகளை கருத்திற் கொண்டு மாளிகை அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தற்போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை சுமூகமடைந்துள்ளதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்கள் எதுவும் ஏற்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.