Breaking News

ஜனா­தி­பதி தலை­மையில் இன்று சர்­வகட்சி கூட்டம்

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் சர்­வ­கட்சிக் குழுக்­கூட்டம் இன்று ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடைபெற­வுள்­ளது. மாலை 5.00 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெற­வுளள­துடன் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்­க­ளுக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்­தினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ரணை குறித்து ஆராய்­வ­தற்­கா­கவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன சர்­வ­கட்சி குழுக்­கூட்­டத்தை நடத்­த­வுள்ளார் .

இலங்­கையில் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள், மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள், தொடர்பில் பொது­ந­ல­வாய நாடு­களை நீதி­ப­திகள் மற்றும் சட்­டத்­த­ர­ணிகள், வழங்­க­றி­ஞர்­களை உள்­ள­டக்­கிய விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று கோரும் பிரே­ரணை ஐ.நா. மனித உரிமை பேர­வையில் இம்­மாதம் முதலாம் திகதி நிறை­வேற்­றப்­பட்­டி­ருந்­தது. இந்தப் பிரே­ர­ணைக்கு இலங்கை அர­சாங்­கமும் அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது.

இவ்­வி­டயம் குறித்து ஆராய்ந்து அடுத்த கட்ட நட­வ­டிக்­கைகள் எடுப்­ப­தற்­கா­கவே சர்­வ­கட்­சிக்­கு­ழுக்­கூட்டம் கூட்­டப்­ப­ட­வுள்­ளன. அதா­வது ஐக்­கிய நாடு­களின் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணைக்கு அமை­வாக உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்­பது குறித்து இதன்­போது ஆரா­யப்­ப­ட­வுள்­ளது.

மேலும் நேற்று முன்­தினம் பாரா­ளு­மன்­றத்தில் வெளி­யி­டப்­பட்ட பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்கை தொடர்­பா­கவும் அதன் பரிந்­து­ரைகள் குறித்தும் இதன்­போது விரி­வாக ஆரா­யப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.இந்த சர்­வ­கட்சி குழுக் கூட்­டத்தின் பின்­னரே உள்­ளக விசா­ரணை பொறி­மு­றையை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது தொடர்­பான தேசிய மட்ட கலந்­து­ரை­யா­டல்­களும் ஆலோ­ச­னை­களும் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்­கப்­படும்.

அண்­மையில் ஐக்­கிய நாடுகள் பொதுச் சபையின் 70 ஆவது கூட்டத் தொடரில் கலந்­து­கொண்­டி­ருந்த ஜனா­தி­பதி நாடு திரும்­பி­ய­வுடன் இவ்­வாறு சர்­வ­கட்சி மாநாட்டை நடத்­து­வ­தாக கூறி­யி­ருந்தார்.

அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து நாடு திரும்­பி­யதும் செய்­தி­யாளர் மாநாடு ஒன்றை நடத்­திய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இலங்கைத் தொடர்­பான அறிக்கை மற்றும் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட அமெ­ரிக்­காவின் பிரே­ரணை உள்­ளக விசா­ரணை பொறி­முறை தொடர்­பாக விரைவில் சர்­வ­கட்சி மாநாட்டை என்று கூறி­யி­ருந்தார்.

மேலும் மேலும் விரைவில் பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்­தவ என அனைத்து மதத்­தி­ன­ரையும் சார்ந்த மாநாட்டை நடத்துவுள்ளதுடன் அவர்களது ஆலேசனைகளை பெற்றுக் கொள்வேன். நாட்டுக்குள்ளும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையின் கல்விமான்களை அழைத்து கலந்துரையாடல்களை நடத்தவும், ஆலேசனைகளை பெறவும் உத்தேசித்துள்ளேன் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.