Breaking News

நாடாளுமன்றில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் செல்வம் எம்.பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் யுத்தத்தில் உயிர்நீத்த விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தேசிய அரசாங்கத்தின் கன்னி வரவு – செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாடாளுமன்றில் நடைபெற்று வரும் நிலையில், அதில் பங்கேற்று உரையாற்றிய அவர், தமது உரையின் நிறைவில் மௌன அஞ்சலி செலுத்தியதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும், 100 நாள் வேலைத்திட்டத்தில் பல செயற்பாடுகளை முன்னெடுத்த அரசாங்கம் தற்போது செயற்படாமல் காணப்படுவதாக தெரிவித்த அவர், இவ்வாறான நிலை தொடர்ந்தால் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை அற்றுப்போகும் நிலை உருவாகுமென குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், விடுவிக்கப்படாத தமிழ் அரசியல் கைதிகளை எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் குறிப்பிட்டார்.