Breaking News

கிளிநொச்சியில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்

தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் தமிழ்த் தேச மாவீரர் தின நிகழ்வுகள் கிளிநொச்சியில் சிறப்புடன் நடைபெற்றன.


தமிழ் தேசிய பற்றாளர்களினால் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இந் நிகழ்வில், மக்கள் பிரதி நிதிகளும், தமிழின உணர்வாளர்களும் இணைந்து சுடர் ஏற்றி கார்த்திகை பூக்களால் தேசத்தின் புதல்வர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

நெஞ்சு நிறைந்த நினைவுகளை சுமந்த இதயங்கள் மனந்திறந்தழுது, தங்கள் பிள்ளைகளை செஞ்சிறுத்தி அவர்களது இலட்சியங்களை வெற்றி பெறச்செய்வதற்கு உறுதியளித்து கொண்டமை இந்நிகழ்வின் சிறப்பம்சமாகும்.

இந் நிகழ்வு நடந்த சூழலிலே புலனாய்வாளர்கள் சூழ்ந்து காணப்பட்டனர்.