Breaking News

எமது விடு­தலை தொடர்­பாக வடக்கு முதல்வர் தலை­மையில் ஒன்­று­கூடி முடி­வெ­டுங்கள் - கைதிகள் கோரிக்கை

எமது விடு­தலை தொடர்­பாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகாண சபை உறுப்­பி­னர்கள், தமிழ்த் தேசிய தரப்­புக்கள், சிவில் அமைப்­புகள் என அனைத்து தரப்­பி­னரும் உட­ன­டி­யாக ஒன்­று­கூடி முடி­வெ­டுங்கள் என உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் தமிழ் அர­சியல் கைதிகள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வன்­னி­மா­வட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன், சிவ­மோகன் ஆகி­யோ­ரிடம் கோரிக்கை விடுத்­துள்­ளனர்.

தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான சிவ­சக்தி ஆனந்தன், சிவ­மோகன் மற்றும் மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளான தியா­க­ராஜா, நட­ராஜா ஆகியோர் நேற்று முற்­பகல் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லைக்கு நேர­டி­யாக விஜயம் செய்தபோதே கைதிகள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இதன்­போது உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் கைதி­களின் உடல்­நிலை மற்றும் அவர்­க­ளது கருத்­துக்கள் தொடர்­பாக எம்.பி.க்கள் கேட்­ட­றிந்து கொண்­டனர். இவ்­வி­ஜயம் குறித்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ­சக்தி ஆனந்தன் கருத்து வெளியி­டு­கையில்,

உண்­ணா­வி­ர­த­மி­ருக்கும் அர­சியல் கைதி­களின் உடல் நிலை சோர்­வ­டைந்­துள்­ளது. அவர்­களின் விடு­தலை தொடர்­பாக நல்­லாட்சி அர­சாங்கம் வாக்­கு­று­தி­ வழங்­கு­கின்­ற­போதும் தற்­போது வரையில் அவற்றை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டா­தி­ருக்­கின்­றமை கவலை அளிக்­கின்­றது.

அவ்­வா­றான நிலையில் எமது விடு­தலை தொடர்­பாக வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் தலை­மையில் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள், தமிழ்த் தேசியத் தரப்­புக்கள், சிவில் அமைப்­புகள் உள்­ளிட்ட அனைத்து அமைப்­பு­களும் உட­ன­டி­யாக கூடி ஆராய வேண்டும். அக் கூட்­டத்தில் எமது கோரிக்­கை­களை உள்­வாங்கும் வகை­யி­லான உறு­தி­யான நிலைப்­பா­டொன்று அறி­விக்­கப்­ப­ட­வேண்டும். அந்­நி­லைப்­பாட்டை அடை­வ­தற்­காக அனை­வரும் ஒன்­று­பட்டு பய­ணிக்க வேண்­டு­மென அவர்கள் என்­னி­டத்தில் கோரி­யுள்­ளனர்.

அதே­நேரம் அவர்­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி நாளை­ய­தினம் நாம் வவு­னியா­ மா­வட்­டத்தில் ஹர்த்­தாலை அனுஷ்­டிக்­க­வுள்ளோம். அது­மட்­டு­மன்றி எமது தலைமை ஊடாக அவர்­களின் விடு­தலை தொடர்பில் தொடர்ந்தும் அர­சாங்­கத்­திற்கு அழுத்­த­ம­ளிக்­க­வுள்ளோம்.

இவர்­களின் விடு­தலை தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்ற அனைத்து செயற்­பா­டு­க­ளுக்கும் ஆத­ர­வ­ளிக்­க­வுள்ளோம். தமிழ் மக்­களின் ஆத­ர­வுடன் ஆட்­சி­பீ­டத் தில் உள்ள நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் நீண்டகாலக் கோரிக்கைகளை நிறைவேற்றி நல்லெண்ண சமிக்ஞையை வெளிப்படுத்தவேண்டும். அதனை செய் யத்தவறுமாயின் எதிர்காலத்தில் எமது மக் களுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக மக்கள் மயப்படுத்தப்பட்ட ஒன்றிணைந்த போராட்டத்தை முன்னெடுக்க தயங்கமாட் டோம் என்றார்.