Breaking News

ஊழல், மோசடிகள் மறைக்கப்படுகின்றன! ஊழலுக்கெதிரான குரல்

கடந்த ஆட்சிக் காலத்தின்போது இடம்பெற்ற ஊழல், மோசடிகள் குறித்து செய்யப்பட்ட முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் பூர்த்தியடைந்துள்ள போதிலும் அவற்றுக்கெதிராக வழக்கு தாக்கல் செய்வதைத் திட்டமிட்டு தவிர்த்துவருவதாக ஊழலுக்கெதிரான குரல் என்ற அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

இவ்வாறு 27 முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு அவற்றுக்கான அறிக்கை சட்டமா அதிபர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு, அவை திட்டமிட்டு மறைக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நல்லாட்சியில் ஊழல், மோசடியாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதன் பலனாகவே இந்த ஊழல் மோசடிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படுவது தடுக்கப்பட்டுளு;ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.