Breaking News

யாழ்.பல்கலையில் 6.05 க்கு ஏற்றப்பட்டது ஈகைச்சுடர் (படங்கள்)

யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் மாவீரர் நாள் அனுஷ்டிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சற்று முன்னர் யாழ் பல்கலைகழகத்தின் கைலாசபதி அரங்கிற்கு அருகில் உள்ள நினைவு தூபியிலம் கைலாசபதி அரங்கின் மேற் தளத்திலத்திலும் ஈகைச் சுடர் ஏற்றி வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்

களமாடி மரணித்த போரளிகளை நினைவுகூரும் முகமாக நவம்பர் 27ம் திகதி மாலை 6.05 நிமிடமளவில் புலிகளின் தலைவர் பிரபாகரனினால் ஈகைச் சுடர் ஏற்றி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுவதுடன் அதனைத் தொடர்ந்து மாவீரர் தின உரை நிகழ்த்தப்படுவது மரபாக இருந்து வந்தது.

அதன் அடிப்படையிலேயே யாழ் பல்கலைகழக மாணவர்களால் தற்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.