Breaking News

எவன்கார்ட் சர்ச்சை : அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார் திலக் மாரப்பன

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். 

தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் தெடர்ந்தும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

எவன்-கார்ட் சர்சையில் அமைச்சரின் பெயரும் கசிந்துள்ளதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளர்.  இன்று காலை அவரின் வீட்டில் இடம்பெற்ற விஷேட ஊடக சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.