Breaking News

மன்னாரை வந்தடைந்தார் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை (படங்கள்)

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்திற்குரிய
இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை இன்று (புதன் கிழமை) மாலை விசேட வானூர்தி மூலம் மன்னாரை வந்தடைந்துள்ளார்.

மன்னார் மறைமாவட்ட ஆயரின் உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஆயர் அவர்கள் குணமடைந்து சிங்கப்பூரில் இருந்து இன்று காலை விமானத்தில் இலங்கை விமான நிலையத்தை வந்தடைந்து அதன்பின்னர் விமான நிலையத்தில் இருந்து ஆயர் விசேட வானூர்தி மூலம் மன்னார் தாள்ளாடி விமானத்தளத்தை வந்தடைந்துள்ளார். 























ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் மற்றும் அருட்தந்தை எமில்ராஜ் ஆகியோர் சிங்கப்பூரிலிருந்து ஆயருடன் வருகை தந்துள்ளதாக மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. இதன்போது மன்னார் ஆயர் விசேட அம்புலன்ஸ் வண்டி மூலம் மன்னார் ஆயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக மன்னார் ஆயர் இல்லத்திலிருந்து அறியவருகின்றது.

தொடர்புபட்ட செய்தி

மன்னார் ஆயருக்கு இராணுவம் நஞ்சு கொடுத்ததா (காணொளி)